districts

img

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அந்த ஒரு நிமிடம்!

தமிழ்நாட்டில் 2008 ஆண்டு செப் டம்பர் 15 ஆம் தேதியன்று 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை அறி முகப்படுத்தபட்டது. 200 ஆம்புலன்ஸ் கள் மூலம் துவங்கப்பட்ட இத்திட்டம், 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் உயிரை காக்கும் தேவை கள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படு கிறது. இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை என் பது, சாலை விபத்திலும், உடலில் ஏற் படும் உபாதையாலும் பாதிக்கபட்டவர் களை விரைந்து சென்று மீட்டு, அவர் களை தக்க சமயத்தில் மருத்துவம னைக்கு கொண்டு சென்று, அவர்களின் உடல் நலன் மற்றும் உயிரை காப்பாற் றும் விதமாக துவங்கப்பட்டதாகும். இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை அறி முகப்படுத்தபட்டதன் காரணம் ஏழை, எளிய மக்களின் உயிர் மீதும், அவர்களின் உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு அரசால் அறிமுகப்படுத்தபட்டது. எளிய மக்களின் துயரங்களை துடைக்க கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் மூலம், திடீரென விபத்தில் சிக்குபவர் களை காக்கும் மகத்தான சேவையை 108 ஆம்புலன்ஸ்கள் வழங்கி வருகிறது.  அரசால் 108 ஆம்புலன்ஸ் சேவை திட் டம் நடைமுறையில் உள்ள நிலையிலும், பெரும் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்க போதுமான ஆம்புலன்ஸ்கள் அவ் வப்போது கிடைப்பதில்லை. அதனை நிவர்த்தி செய்யும் வகையில், மக்களை காக்க பல தனியார் தொண்டு நிறுவனங் கள், அறக்கட்டளை நிறுவனங்கள் போன் றவை இலவச ஆம்புலன்ஸ் சேவைகளை  வழங்கி வருகின்றன. உயிரை காக்க ஆம்புலன்சில் சக்கரமாய் சுழலும் இதன் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக கோவை அரசு மருத் துவமனையில் ஜீவசாந்தி அறக்கட்டளை யின் மூலம் சுமார் 10 ஆம்புலன்ஸ்களை இயக்கி வரும் சலீம் என்பவர் கூறுகை யில், ஜீவசாந்தி அறக்கட்டளை மூலமாக சாலையோரங்களில் எச்ஐவி, டிபி போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், சாலை விபத்துகள் மற்றும் உடல்நல குறைபாட்டில் பாதிக்கபட்ட வர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் உதவி செய்து வருகிறோம். நாங்கள் ஆம்பு லன்ஸ் ஓட்டுநராக இருந்து பொதுமக்க ளுக்கு கூறுவது என்னவென்றால், நகர்ப் புறங்களில் மக்கள் தொகை அதிகரிப் பால், அன்றாட வாழ்வில் விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்ட மக்கள் எங்களை அழைக்கின்றனர். ஆம் புலன்ஸ் ஓட்டுநராகிய நாங்கள் குறிப் பிட்ட நேரத்தில் மருத்துவமனையை அடைந்தால் மட்டுமே தான் விபத்திற் குள்ளானவர்கள் மற்றும் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற முடியும். அந்த நேரத்தில் நாங்கள் சந்திக்க  வேண்டிய பிரச்சனைகள் என்னவென் றால், சாலை வசதிகள் தான்.

போக்குவரத்து நெரிசல், மக்கள்  நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், குண்டும், குழியுமான சாலைகளால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்ல, எங்களுக்கு கூடுதலாக நேரம்  தேவைப்படுகிறது. உயிரை காக்கும்  பொருட்டு மோசமான சாலையில் வேகமாக செல்லும்போது, ஆம்புலன் லில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிரமத் திற்குள்ளாகின்றனர். அதேசமயம், பாதிக் கப்பட்டவர்களை அழைத்து செல்லும் பொழுது, சாலையோரங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்காக நின்ற இடத் திலேயே பிராத்தனை செய்கின்றனர். இந்த நிகழ்வு, எங்களுக்கு எப்படியாவது இந்த உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களின் மனதில் தோன் றும். வாகன ஓட்டிகளை பொருத்த வரை யில், பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஆம்புலன்ஸ் வரும் பொழுது இடதுபுற மாக வழிவிடுவதா? வலது புறமாக வழி விடுவதா? என்று தெரியாமல் இருக்கின் றனர். ஆம்புலன்ஸ் வரும்பொழுது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இடதுபுறமாக சென்று, வலது புறமாக வழிவிட வேண்டும். அந்த ஒவ்வொரு விநாடியும், ஒரு உயிரை காப்பாற்றும் விலை மதிப்பற்ற நேரமாகும். இது  மட்டுமின்றி எங்கள் வாகனம் செல்லும் பொழுது பின் தொடர்ந்தும், எங்கள் வாகனங்களை முந்தி செல்லும் வகை யிலும் வாகன ஓட்டிகள் செயல்படுவது, வருந்ததக்க நிகழ்வாகும், என்றார். அரசு சாலை வசதிகளை செய்து தர வேண்டும். பொதுமக்களும், விபத்திற் குள்ளானர்களை அழைத்து செல்லும்  ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும். எவ் வளவு முக்கியமான வேலையாக இருந் தாலும், சக மனிதனின் உயிரை காப்பாற் றும் முயற்சியில் பொதுமக்களும் வழி விட்டு உதவ வேண்டும்.  என்ற நோக் கத்தில், சாலையில் வரும் ஆம்புலன்ஸ்க ளுக்கு வழிவிட வேண்டும். ஆம்புலன்ஸ் களுக்கு வழிவிட நாம் செலவிடும் ஒரு  சில மணித்துளிகள் கூட, ஒரு மனிதனை மீண்டும் உயிர்ப்பிக்க ஏதுவாக இருக் கும். ஒரு விநாடியை கூட வீணடிக்கக் கூடாது என்று நினைத்து செயலாற்றி வரும் ஆம்புலன்ஸ் பணியாளர்களை மதிப்போம்; போற்றுவோம்!

-ரூபன் சாந்தகுமார்