districts

img

திறந்த நிலையில் பாதாளச்சாக்கடை குழி விபத்து ஏற்படும் முன்பு மூடுமா தருமபுரி நகராட்சி

தருமபுரி ஜூன் 19- தருமபுரி இந்தியன் வங்கி ஏடிஎம் முன்பு பாதாளச்சாக்கடை கால்வாய் குழி திறந்த நிலையிலேயே உள்ளது குழியில் விழுந்து விபத்து ஏற்படும் முன்  குழியை மூட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகரம் பென்னாகரம் பிர தான சாலையில் இந்தியன் வங்கி மெயின் கிளை உள்ளது. இந்த வங்கி யின் முன்பு 24 மணிநேரமும் செயல்ப டும் ஏடிஎம் உள்ளது. வங்கிக்கு தினந் தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கை யாளர்கள் பணபரிவர்த்தனைக்கு வந்து  செல்கின்றனர். மேலும், வங்கியின் முதல் தளத்தில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. தருமபுரி பேருந்து நிலையத்தை யொட்டி உள்ள முக்கிய சாலையாக உள் ளது. இந்தியன் வங்கி முன்பு அமைந் துள்ள ஏடிஎம் நுழைவாயில் பாதாளச் சாக்கடை திட்ட கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சுத்தம் செய்யும் பகுதி  திறந்துள்ளது. ஏடிஎம் முன்பு திறந்த நிலையில் குழி இருப்பதால், ஏடி எம்க்கு பணம் எடுக்க வருவோர் தெரி யாமல் சாக்கடை கால்வாய் குழியில்  தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே, உட னடியாக சாக்கடை கால்வாய் குழியை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.