திருப்பூர், நவ.30- திருப்பூர் மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கருணாம் பிகை பேப்பர் ஸ்டோர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து. தீயணைப்பு வீரர்கள் மூன்று தீய ணைப்பு வாகனங்களை கொண்டு தீயை கட் டுக்குள் கொண்டு வந்தனர். திருப்பூர் மாநகர் மேட்டுப்பாளையம் சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத் திற்கு எதிரே கருணாம்பிகை பேப்பர் ஸ்டோர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரி மையாளர் மங்கலம் சாலையை சேர்ந்த சந்தி ரசேகர். மூன்று தளங்கள் கொண்ட இந்த நிறு வனத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகள் மற்றும் பிரின்டிங் செய்ய பயன்படுத்தப்ப டும் கெமிக்கல்கள் அடுக்கி வைக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் திடீரென தீ பற்றி கரும்புகை கிளம்பியுள்ளது. இதையடுத்து தீயணைப்புத் துறையிக்கு தகவல் தெரிவித் துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலைக ளில் கூடினர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றம் செய்து அங்கு குழுமி இருந்த மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடோன் முழுவதும் அட்டைப்பெட்டிகள் நிரம்பி இருந்ததால் தீயை அணைப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. மேலும் பிரின்டிங் செய்ய பயன்படுத்தப் படும் கெமிக்கல்கள் இருந்ததாலும் தீயை அணைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் மற்றும் பிரின்டிங் பேப்பர்கள் எரிந்து நாசமாகி உள்ளது. தொடர்ந்து தீ விபத் திற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மின் விபத்து காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங் களால் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்து தொடர் பாக நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரசேக ரிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் முழு விசாரணை முடிவிலேயே சேத மதிப்பு குறித்து பெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.