districts

திருப்பூரில் நில அதிர்வா! தாராபுரத்தில் பயங்கர வெடி சத்தம்

திருப்பூர், ஆக.28- திருப்பூர், நாச்சிபாளையத்தில் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு கார ணமாக, வீட்டிலிருந்த பொருட்கள் நகர்ந்ததால் பொதுமக்கள் அச்ச மடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திங்களன்று பலத்த சத் தத்துடன் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு திருப்பூர், நாச்சிபாளையம் பகுதி யில் செயல்பட்டு வரும் டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதி வானது. அதில், நில அதிர்வு ஏற்பட்ட போது கடையின் ஷட்டர், தகர சீட்டு கள் குலுங்கிய காட்சிகள் பதிவாகி யுள்ளன. திருப்பூர் – காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  திங்களன்று மாலை நில அதிர்வு உண ரப்பட்ட போது, பல்வேறு வீடுகளில் பொருட்கள் நகர்ந்துள்ளது. இத னால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் தங்களது பகுதியில் பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு,  இயற்கையாகவே ஏற்பட்ட நில  அதிர்வா? இல்லை கல்குவாரியில் பாறைகளை பெயர்ப்பதற்காக வைக் கப்பட்ட வெடிச்சத்தமா? என பல் வேறு கேள்விகளை எழுப்பி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரு கின்றனர். தாராபுரத்தில் வெடி சத்தம் இதேபோல, தாராபுரத்தில் திங்க ளன்று மாலை ஊரே குலுங்கும் வகை யில் அதிபயங்கர வெடி சத்தம் கேட் டது. இந்த சத்தமானது சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 80க்கும் மேற் பட்ட கிராமங்களில் உணர முடிந்த தாக பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது வீடுகளில் இருந்த பொருட் கள், பீரோ ஆகியவை நகர்ந்த தாக தெரிவித்தனர். இந்த வெடி சத்த மானது வானில் விண்கற்கள் ஒன்று டன் ஒன்று மோதி கொண்டதால் ஏற் பட்ட சத்தமா? அல்லது தாராபுரம் அருகே புகளூர் பவர் கிரிட் நிறுவனத் தில் அதிக சக்தி கொண்ட மின் டிரான்ஸ் பார்மர்களில் மின் அழுத்தத்தால் ஏற் பட்ட சத்தமாக இருக்குமா? அல்லது நில அதிர்வு காரணமா? என பொது மக்கள் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டனர். தாராபுரம், மூலனூர், குண்டடம் மற்றும் அதனை சுற்றி யுள்ள 80க்கும் மேற்பட்ட நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட் டது. இரவு முழுவதும் பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர்  மாநகர் மற்றும் தாராபுரம், காங்கே யம் உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட  பயங்கர சத்தம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சூலூர் விமான படை தளத்தில் இருந்து பறக்கும் போர் விமானங்களால் அவ்வப்போது பயங்கர சத்தம் கேட்கும். ஆனால், திங்களன்று ஏற்பட்ட சத்தம் போர்  விமானங்களால் ஏற்படவில்லை. எனவே, அதுகுறித்து செவ்வாயன் றும் ஆய்வு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சத்தத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் நில  அதிர்வு ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர்  அளவுகோலில் 2 ஆக பதிவாகி உள் ளது. எனவே நில அதிர்வு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்யப் படும், என்றனர்.