திருப்பூர், மே 16- தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் மற்றும் திருப்பூரில் நடைபெற்றது. தாராபுரத்தில் விவசாயிகள் சங்க அலுவலகத்தில் சனி யன்று அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்ரா மன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அறநிலை யத்துறை மற்றும் வக்பு போர்டும் விவசாயிகளை நிலத் திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண் டும். பத்திரப்பதிவு தடையை நீக்க வேண்டும். கூட்டுறவு பயிர் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை மாதத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அடிமனை பயனாளிகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் வ.செல்வம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.தங்கவேல் நன்றி தெரிவித்தார். தாராபுரம் தாலுகா தலைவர் நடராஜ் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். அதேபோல், திருப்பூர் பி.ஆர்.நிலையத்தில் அமைப்பின் மாவட்ட தலைவர் நல்லூர் சி.சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் வ.செல் வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட துணை துணைத்தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி, மாவட்ட பொரு ளாளர் ஜி.ஈஸ்வரமூர்த்தி உட்பட திரளான அடிமனை பய னாளிகள் கலந்து கொண்டனர்.