districts

img

ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஈரோடு, நவ. 4- ஈரோடு மாநகராட்சியில் சுகா தாரப் பிரிவு ஊழியர்கள் நான்காவது நாளாக நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தையடுத்து தமிழக  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம் பாட்டுத் துறை அமைச்சர் சு.முத்து சாமி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாநகராட்சியில், பொது சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மாநக ராட்சி ஊழியர்களாக நீடிப்பது என்பது கேள்விகுறியாக உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற பிரதிநிதிகளும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிடுகிறது.  சென்னை நீங்கலாக ஏனைய மாந கராட்சிகளில் நிரந்தர பணியாளர் களைக் குறைத்து அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்ப டைக்கும்

அரசாணை வெளியா னதைத் தொடர்ந்து கடந்த  அக். 31ஆம் தேதி முதல் பணியைப் புறக் கணித்து ஈரோடு மாநகராட்சி அலு வலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அவசர மாமன்ற கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டாலும், போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக முதல்வரின் கவனத் திற்குக் கொண்டு சென்று மறுபரிசீ லனை செய்யக் கேட்பது என்று ஏக மனதாக முடிவானது. எனினும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை என தொடர்ந்து 4 நாட்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மக்கள் பிரதிநிதிகளும், போராட் டக்காரர்களை களத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இந் நிலையில் 3ஆவது நாள் போராட்டக் களத்திற்கு வந்த பாஜக சட்ட மன்ற உறுப்பினர் சரஸ்வதியை  போராட்டக்காரர்கள் புறக்கணித் தனர். வியாழனன்று 4 ஆவது நாள்  போராட்டத்தில் மாநகராட்சி அலு வலக வளாகத்திலேயே உணவு  சமைத்துச் சாப்பிட்டு போராட்டத் தைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்தால்  மாநகரப் பகுதிகளில் குப்பைகள் அள்ளப் படாமல் தேங்கியது. இதனால்  தெருக்கள், சாலையோரம் குப்பைகள் குவிந்தது. வீடுகளில் சேர்ந்த குப்பைகளை மக்கள் தெருக் களில் போட்டு சென்றனர். இதுவரை  சுமார் 400 டன் குப்பை தேங்கியது. 4ஆவது நாளில் வீட்டு வசதி மற்றும்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  சு.முத்துசாமிபோராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து  4 நாள் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. 

தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு ஆர்ப்பாட்டம்

ஈரோடு உள்ளிட்ட 20 நகராட்சி களில் நிரந்தர பணியாளர்கள் எண் ணிக்கையை 90 விழுக்காடு குறைத்து  தனியார் மயப்படுத்தும் அரசா ணையை ரத்து செய்யக் கோரி  அனைத்து தொழிற்சங்க கூட்டு நட வடிக்கைக்குழு சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடை பெற்றது. சிஐடியு மாவட்ட  தலைவரும், ஊரக வளர்ச்சி  உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத் தின் மாவட்ட தலைவருமான எஸ். சுப்ரமணியன் தலைமை வகித்தார்.  எல்பிஎப் மாவட்ட கவுன்சில் தலைவர்  தங்கமுத்து, ஏஐடியுசி தலைவர் சின்னசாமி, மாநகராட்சி பணியாளர் சங்க தலைவர் வெங்கிடுசாமி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 8ஆம் தேதி கோரிக்கை மனுக் களை மாவட்ட ஆட்சியர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பது என்றும், 13ஆம் தேதி  சிறப்பு கோரிக்கை மாநாடு நடத்து வது என்றும் அனைத்து தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின்  சார்பில் அறிவிக்கப்பட்டது. நிறை வாக சிஐடியு செயலாளர்  மாணிக்கம் நன்றி கூறினார்.