சேலம், ஜன. 4- சேலத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத் தில் நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் உறவி னர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், பாகல்பட்டி ஊராட்சி, செங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர். பக்கத்து ஊரில் வசிக்கும் சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்ப வம் தொடர்பாக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யாமல் காவல்துறையினர் ஒருதலைப் பட்சமாக செயர் படுவதாகவும், குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தம் இல்லாதவர்களை கைது செய்து வருவதாகவும் போராட்டத் தில் ஈடுபட்ட ஸ்ரீதர் குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்ரீதரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என ஸ்ரீதரின் குடும்பத்தினர் தெரிவித்து தொடர்ந்து நான்காவது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.