கோவை, நவ.8- இந்திய தொழில் கூட்டமைப்பு மூலமாக தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு கோவையில் நடைபெற உள்ளது. கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொழில் கூட்டமைப்பு மூலமாக வரு கிற 17ஆம் தேதியன்று கோவையில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்ட மைப்பு ஆகியவை இணைந்து தொழில்நுட்ப ஜவுளி கருத்த ரங்கம் நடத்த உள்ளன. மேற்படி கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ள னர். அக்கருத்தரங்கில், தொழில்நுட்ப ஜவுளி துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்கு குறித்து கலந்துரையா டல் செய்யப்பட உள்ளது. எனவே, இக்கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் https://bit.ly/CIITechnicalTextiles என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தொடர்பு கொள்ள 0421 2220035, 9442186070, 9750160503 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கோயம்புத்தூரில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நவ.17,18 ஆகிய தேதியில் நடைபெறவுள்ளது. இதுதொடர் பான முன்விளக்கக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் துணி நூல் துறை ஆணையர் எம்.வள்ளலார் தலைமை வகித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட இக்கூட்டத் தில், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு பொறுப் பாளர் வேல்கிருஷ்ணா வரவேற்றார். கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். இக்கூட் டத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு ஈரோடு பொறுப் பாளர் டி.சண்முகசுந்தரம், துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அம்சவேணி, இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகி திருக்குமார், தொழில் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.