உதகை, மார்ச் 21- ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை கண்கா ணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள வனப்பகுதி யில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் மற்றும் பசுந்தீவனத்தை தேடி காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானை கூட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை கடந்து அங்குள்ள ரன்னிமேடு தண்டவாளத் தில் முகாமிட்டிருந்தன. அத்துடன் ரயில் பாதையில் உள்ள குடிநீர் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியது. இத னால் ரன்னிமேடு பகுதியை சுற்றியுள்ள விதை பண்ணை, தேயிலை தோட்ட தொழிலாளர் மற்றும் கிளண்டேல் குடி யிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்த னர். எனவே, காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக, இப்பகுதியில் காட்டு யானை களை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைத்து உள்ள னர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ரன்னி மேடு பகுதியில் நடமாடும் காட்டு யானைகளை விரட்ட 15 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும், என்றனர்.