districts

img

பாஜக அரசின் எதேச்சதிகார நடவடிக்கையை எதிர்த்து திருப்பூரில் இந்தியா அணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 5 - மூன்று குற்றவியல் சட்டத் திருத்தங்க ளைத் திருத்தி சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டி  உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்த பாரதிய ஜனதா அரசின் எதேச்சதிகார நடவடிக்கையை எதிர்த்து இந்தியா அணி வழக்கறிஞர்கள் திருப்பூரில்  கண்டன ஆர்ப் ர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பாக வெள்ளின்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்தி பன் தலைமை ஏற்றார். இதில் மதிமுக வழக்க றிஞர் எஸ்.தமயந்தி, திமுக வழக்கறிஞர் அவி நாசி செல்வராஜ், அகில இந்திய வழக்கறி ஞர் சங்க நிர்வாகிகள் அ.மணவாளன், எஸ். ஏ.,தமயந்தி, திங்களவள், வை.ஆனந்தன், எஸ்.பொன்ராம் மற்றும் சந்திரமோகன் உள் ளிட்டோர் ஒன்றிய அரசின் பாதகமான செயல் பாட்டைக் கண்டித்து உரையாற்றினர். இதில், பெண் வழக்கறிஞர்கள் உள்பட  இந்தியா அணி வழக்கறிஞர்கள் திரளானோர்  கலந்து கொண்டு மோடி அரசை எதிர்த்து முழக்கம் எழுப்பினர்.  உடுமலை  உடுமலை குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு வெள்ளியன்று தெற்கு மாவட்ட திமுக  வழக்கறிஞர் அணி அமைப்பாளர்  பொன்ராஜ்   தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்த லைவர்  நடராஜன், துணை அமைப்பாளர் கள் மகேஸ்வரன்,  இந்திரா கலை நாச்சியார்  மற்றும் உடுமலை, மடத்துக்குளம் வழக்கறி ஞர்கள் மற்றும் தோழமைக்  கட்சி வழக்கறி ஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.