districts

img

தொடர் ஆய்வுகளால் சீரழியும் தொடக்கக் கல்வித் துறை

திருப்பூர், நவ. 19 - மாறி மாறி நடத்தப்படும் தொடர் ஆய்வுக ளால் தொடக்கக் கல்வித் துறை சீரழிவ தாகவும், இயல்பான கற்றல், கற்பித்தல் கடு மையாக பாதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடுமை யாக குற்றஞ்சாட்டியுள்ளது.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பொங்க லூரில் சனிக்கிழமை மாவட்டத் தலைவர்  இரா.ராஜ்குமார் தலைமையில் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் அ.பிரபு செபாஸ்டி யன் வரவேற்றுப் பேசியதுடன், அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளாளர் பா. ஜெயலட்சுமி வரவு- செலவு அறிக்கையை முன்வைத்தார். மாநில செயற்குழு உறுப் பினர் ப.கனகராஜா உள்பட வட்டாரச் செயலா ளர்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம்: கல்வித் துறையில் வட்டார மற்றும்  மாவட்ட அலுவலர்களால் மேற்கொள்ளப்ப டும் ஆய்வுகள், மண்டல ஆய்வுக்கூட்ட குழுக் களின் ஆய்வுகள், மாநில இயக்குனர்கள் ஆய்வு, ஒரே நாளில் வட்டாரத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் குழு ஆய்வு,  மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு, வரு டாந்திர பள்ளி ஆண்டாய்வு, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் குழு ஆய்வு, பள்ளிக் கல்வி துணை மற்றும்  இணை இயக் குனர்கள் ஆய்வு, பள்ளிக்கல்வி ஆணையர்  ஆய்வு என மாறி மாறி தொடர்ந்து குழு ஆய்வு கள் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் இந்த  ஆய்வுகள் நடைபெறும், ஒவ் வொரு ஆய்வாளரும், ஒவ்வொரு ஆய்வுக்  குழுவும் பலவிதமான ஆலோசனை களையும், வழிமுறைகளையும் கூறி  வருவதால், இயல்பான கற்றல் கற்பித் தல் பணிகளும், பள்ளி நடைமுறைகளும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும்  தொடர் ஆய்வுப் பணிகளால் கற்றல்  அடைவுகளை உருவாக்குவதில் சீரான படிப்படியான வழிகளை பின்பற்ற  இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால் மாணவரி டையே தேவையற்ற பதட்டமும், அச்ச மும் மேலோங்கி வருகிறது. இந்நிலை தொட ருமானால் மாணவர்களின் இடைநிற்றல் அதி கரிக்க கூடும்.

றும் ஆசிரியர்களுக்கு ஓய்வென்பதே இல்லை. வாரத்தில் ஏழு நாட்களும் பணி செய்து வருவதால் கடும் மன உளைச்சலில் பணி செய்ய வேண்டி இருக்கின்றது. இது  போன்ற கூடுதல் பணிச் சுமையால் ஆசிரி யர்களின் குடும்பமும், உடல் நலமும், கற்றல்  கற்பித்தலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. கற்பித்தல் பணி சிறக்க பிஎல்ஓ பணியில் இருந்து ஆசிரியர்களை உடனடியாக  விடுவிக்க வேண்டும் என கோருகிறோம். மேலும்  இஎம்ஐஎஸ் - இணைய தளப்  பணிகளான புள்ளிவிபரங்கள் பதிவுகள், எஸ் எம்சி கூட்டங்கள், பதிவுகள், பணியிடைப் பயிற்சிகள், கிராமசபை கூட் டப் பங்கேற்பு, தூய்மைப் பணி இயக்கப்  பேரணி, ஊராட்சிமன்ற மக்கள் நலக் கூட் டங்களில் பங்கேற்பு, பள்ளி நிதி தொடர் பான வங்கிப் பணிகள், பள்ளித் தூய்மைப் பணிகள், பள்ளிப் பராமரிப்பு பணிகள்,  பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டங்கள், கலைத் திருவிழா போட்டிப் பணிகள், தேசியப் பணி எனப்படும் வாக்காளர் சேர்ப்பு,  நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் மற்றும்  பல்வேறு விதமான கணக்கெடுப்பு பணிகள்  போன்றவற்றுக்கு இடையேதான் கற்றல் கற் பித்தல் நிகழ்கிறது என்பதை கல்வி அலுவ லர்களும், பள்ளிக் கல்வி துறையும் புரிந்து செயல்பட வேண்டும் என செயற்குழு கேட்டுக்  கொள்கிறது.  தொடக்கக் கல்வித் துறையில் இயங்கும்  ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற் றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு  மாதத்தின் கடைசி நாளில் ஊதியம் வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என  மாவட்ட நிர்வாகத்தையும், கல்வி அலுவலர்க ளையும் செயற்குழு கோருகிறது. தொடக்க கல்வி இயக்குநரின் கீழ் மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் பணி யாற்றவும், சுதந்திரமாக முடிவெடுத்து செயல்படவும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிக ளுக்கு உத்தரவிடுவதிலும், வழி நடத்துவதி லும் சுயமாக செயலாற்றவும் உத்தரவு வழங்க  வேண்டும் என தமிழக அரசையும், கல்வித் துறையையும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாவட்டச் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.