districts

img

வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை, டிச.5- மதுக்கரை வட்டாரக் கல்வி அலுவ லரை கண்டித்து, ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கல்வி அலுவலர் எழுத்துப்பூர்வமான உறுதி அளித்ததையடுத்து போராட்டம் முடி வுக்கு வந்தது. கோவை மாவட்டம், மதுக்கரை  பகுதியில் உள்ள ஒன்றிய அரசுப்  பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் கள் பணியாற்றி வருகின்றனர்.

அதில்  மதுக்கரை அடுத்த பிச்சனூர் ஒன்றிய  அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரிய ராக பணியாற்றி வரும் ஜெயந்தி மாலாவின் கணவருக்கு இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தெரி வித்து உள்ளனர். இதையடுத்து குடும்ப சூழ்நிலை  காரணமாக விருப்ப ஓய்வு பெற்றால் அதில் வரும் பணத்தை வைத்து கணவரின் மருத்துவச் செலவிற்கு பயன்படும் என்று எண்ணிய ஆசி ரியை (விஆர்எஸ்) விருப்ப ஓய்வு  பெற்றார்.

விருப்ப ஓய்வு பணம் பெறு வதற்கு அப்பகுதியில் உள்ள வட்டார  கல்வி அலுவலர் நேசமணி அந்த  ஆசிரியருக்கு என்.ஒ.சி வழங்காமல் உள்ளதால் விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் பணிப் பலன் கள் ஓராண்டாகியும் கிடப்பில் உள் ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதம் கோவை, செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வட்டார கல்வி  அலுவலர் மீது புகார் அளித்து உள்ள னர்.

இதனை அடுத்து வட்டார கல்வி அலுவலர் நேசமணி நிலுவையில் உள்ள விஆர்எஸ் தொகையை பெற்றுத் தருவதாக எழுத்துப் பூர்வ மாக செட்டிபாளையம் காவல் நிலை யத்தில் உறுதி அளித்து உள்ளார்.

 மேலும், அவர் விஆர்எஸ் பணம்  பெற்று கொடுக்க என்.ஓ.சி அதற்குண் டான எந்தப் பணிகளையும் இது வரை மேற்கொள்ளாத காரணத்தி னால் ஆத்திரமடைந்த சக ஆசிரி யர்கள் மதுக்கரை வட்டாரக் கல்வி அலு வலர் நேசமணியை கண்டித்து புத னன்று பிற்பகல் 2 மணி முதல் மதுக் கரை வட்டாரக் கல்வி அலுவலகத் தில் பெண் ஆசிரியர்கள் உட்பட 50க் கும் மேற்பட்டோர், தலைமை ஆசிரி யர் ஜெயந்தி மாலாவிற்கு உடனடி யாக விருப்ப ஓய்வு தொகையை பெற் றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரி உள்ளிருப்பு போரட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த  போலீசார் ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்து, இரவு வட்டார கல்வி அலுவலத்திலேயே படுத்து உறங்கினர். தொடர்ந்து, இரண்டாவது நாளான வியாழனன்று தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத் தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

 இந்நிலையில், மாவட்ட கல்வி  அலுவலர் முன்னிலையில் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் மாவட்ட  கல்வி அலுவலர் எழுத்துப் பூர்வ மாக ஆணை பிறப்பித்ததன் அடிப் படையில் போராட்டம் தற்காலிகமாக  ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட் டது. மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த ஆணையில் வரும் 2.1.2025 க்குள்  கோரிக்கையை நிறை வேற்றி கொடுக்கும்படி வட்டா ரக் கல்வி அலுவலருக்கு ஆணை  பிறப்பித்து உள்ளார். இதன் காரண மாக போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.