districts

img

எதிர்காலத்தை சீரழிக்கும் புதிய கல்வி கொள்கையை கைவிட கோரி திருப்பூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 11 – தேசத்தின் எதிர்காலத்தைச் சீர ழிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கைவிடக் கோரி திருப்பூ ரில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி யது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பாக திங்களன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில் பழைய  ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வும், மத்திய அரசுப்பணி ஆசிரியர்க ளுக்கு இணையான ஊதியத்தை மாநில ஆசிரியர்களுக்கும் வழங்க வும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 3 சதவிகித அகவிலைப்ப டியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கவும், உயர் கல்வி ஊக்க ஊதி யத்தை மீண்டும் வழங்கவும், இடை நிலை ஆசிரியர் பணியிடத்தை பட்ட தாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி, தற்போதுள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்க ளாக பதவி உயர்வு வழங்கவும், ஆசிரி யர் பணிப் பாதுகாப்புச் சட்டம் நிறை வேற்றவும் வலியுறுத்தி கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஎன்பிஜி டிஏ மாவட்டச் செயலாளர் முனியப் பன், டிஎன்ஜிடிஎப் மாவட்டச் செயலா ளர் சோ.சந்திரசேகரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாவட்டச் செயலாளர் அ.பிரபு செபஸ்டியான், டிஎன்பிஜிடிஏ மாநிலத் துணைத் தலைவர் முத்துக்கு மாரசாமி, டிஎன்ஜிபிஎப் மாநிலத் துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி  ஆகியோர் கோரிக்கைகளை  வலியுறுத்திப் பேசினர். இந்தியப்  பள்ளி ஆசிரியர்  கூட்டமைப்பின்  பொதுக்குழு உறுப்பினர் ஜான்  கிறிஸ்துராஜ் சிறப்புரை ஆற்றினார்.  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாநில செயற்குழு உறுப்பினர் பா. கனகராஜா, டிஎன்பிஜிடிஏ மாவட்டத் தலைவர் செல்வகுமார் உள்பட எழுப துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.