districts

img

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்திடுக

திருப்பூர், மார்ச் 23- புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்த வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செய லாளர் அ.பிரபு செபஸ்டியன் தலைமை வகித்தார். இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழ கம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்ட னர். இதில், ஆர்ப்பாட்ட கோரிக்கையை வலி யுறுத்தி மேற்கண்ட சங்கங்களின் நிர்வாகி கள் எம்.செல்வகுமார், ப.கனகராஜா, ந.பால் ராஜ், காட்டுத்துரை, ஏ.பிரகாஷ், கு.விஜயலட் சுமி, சோ.சந்திரசேகரன், த.முனியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.  இடைநிலை ஆசிரி யர் சங்க மாநிலப் பொருளாளர் க.சு.பிரகா சம் சிறப்புரை ஆற்றினார். நிறைவாக ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொருளாளர் பா.ஜெயலட்சுமி நன்றி கூறி னார்

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரி யர் சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர். ரவி தலைமை வகித்தார். மாவட்ட பொருளா ளர்  சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்க மாநில துணைத் தலை வர் மு.மாயகிருஷ்ணன், ஆரம்பப் பள்ளி  ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலா ளர் பெரியசாமி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் நூற்றுக் கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.

நாமக்கல் 

நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப் பாளர் எம்.கலைச்செல்வன் தலைமை  வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சங்க மாவட்ட செயலாளர்   ஆர்.மாதேஸ் கோரிக்கை விளக்க உரை யாற்றினார்.  மாவட்ட செயலாளர் எம். மதிய ழகன் நிறைவுரையாற்றினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்ட னர்.