கோவை, மே 12- காவல்துறையில் பணியாற்றுவோ ருக்கு பாலின சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் எனக்கோரி மக ளிர் ஆணையத்திடம் மாதர் சங்கத்தி னர் மனு அளித்தனர். இதுதொடர்பாக கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா தலைமையில் நிர்வாகிகள், வனஜா, ஜோதிமணி, சுதா ஆகியோர் மகளிர் ஆணைய தலைவரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்கள், குழந்தைகள் மீதான வன் முறை அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைகளில் மாதர் சங்கம் உரிய தலையீட்டை செய்து வருகிறது. இப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் மக ளிர் அமைப்பை இணைத்து ஒரு குழுவை உருவாக்க வேண்டும். காவல் துறையில் பணியாற்றுவோருக்கு பாலின சமத்துவம் தொடர்பான வகுப் புகளை நடத்துவது இக்காலத்தில் தேவையான ஒன்றாக உள்ளது. எனவே, அவர்களுக்கு பாலின சமத்து வத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.