districts

img

மீண்டும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையா?

திருப்பூர், ஏப்.17- இடுவாய் ஊராட்சியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு, அப்பகுதி குடியிருப் போர் நல சங்கத்தினரும், இடுவாய் ஊராட்சி மன்ற நிர்வாகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இடுவாய் ஊராட் சிக்கு உட்பட்ட அண்ணாமலையார், திருமலை, ஜி.என்.கார்டன்கள் குடியி ருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டம், இடுவாய் சீராணம்பாளையம் சாலையில் கடை  எண் 2300 டாஸ்மாக் மதுபான கடை  செயல்பட்டு வருகிறது. அக்கடையை தற்போது இடுவாய் சின்ன காளிபா ளையம் சாலையில் விவசாயத் தோட் டங்கள் நிறைந்த பகுதியில் இடம் மாற்றுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இரவு  பகல் பாராது விவசாய வேலை செய்து வரும் எங்கள் பகுதி மக்களுக்கு அச்சு றுத்தல் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, டாஸ்மாக் மதுபான கடையை இங்கு மாற்றக்கூடாது என்று ஆட்சே பம் தெரிவித்தனர். இதேபோன்று, இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் க.கணேசன், பொது மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனு அளித்தார். இதில், ஏற்கனவே குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு  வரும் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், அந்தக் கடையை மீண்டும் குடி யிருப்பு பகுதியில் மாற்றி அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கருத்தை ஏற்று,  அரசு மதுபான கடையை குடியிருப்பு கள் இல்லாத பகுதிக்கு, ஆட்சியர் மாற்றி அமைக்க உத்தரவு பிறப் பிக்க வேண்டும். 

மேலும், இடுவாய் ஊராட்சியில்  சீராணம்பாளையம் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகி றது. இதனால் இப்பகுதியில் பெண் கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் உள் ளிட்ட பொதுமக்கள் மிகவும் பாதிக் கப்படுகின்றனர். எனவே இந்த கடையை அகற்ற வேண்டும். இடு வாய் ஊராட்சியின் கிராம சபை கூட் டங்களில் நான்கு முறை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடமும் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் நேரடியாக மூன்று முறை மனு அளித்து இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் இந்த  கடையை அகற்ற வலியுறுத்தி போராட் டங்களும் நடத்தப்பட்டுள்ளன.  இச்சூழ்நிலையில், மேற்படி டாஸ் மாக் மதுபான கடையை வேறு இடத் திற்கு மாற்றிக் கொள்வதாக டாஸ் மாக் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித் தது. ஆனால், குடியிருப்பு பகுதிக்கு  பாதிப்பு ஏற்படுத்தும் இந்த கடையை மீண்டும் வேறு ஒரு குடியிருப்பு பகு திக்கு மாற்ற முயல்வது குழப்பத்தை  ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை அதிகரிக்கவும் செய் யும். எனவே மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இடுவாய் ஊராட்சி யில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மக்களுக்கு பாதிப்பு இல் லாத வகையில், வேறு பகுதிக்கு இட மாற்றம் செய்ய வேண்டும் என்று இடு வாய் ஊராட்சி மன்ற தலைவர் க. கணேசன் கூறினார்.