districts

img

டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றியமைத்திடுக

ஈரோடு, ஜன.27- டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட 16 ஆவது மாநாடு சங்கத்தின் தலைவர் என். முருகையா தமைமையில் புதனன்று நடை பெற்றது. சங்கத்தின் கொடியினை துணை  செயலாளர் வி.ராஜேந்திரன் ஏற்றி வைத் தார். சம்மேளன மாநில பொதுச்செயலா ளர் க.திருட்செல்வன் உரையாற்றினார். சம் மேளன துணைத் தலைவர் பொன்.பாரதி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் சி. பிரகாஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் வை.பாண்டி யன், பொருளாளர் க.ரவிச்சந்திரன் ஆகி யோர் அறிக்கையை சமர்பித்து பேசினர். இம்மாநாட்டில், டாஸ்மாக் கடை செயல் படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். வருடக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள சிறு செலவின தொகை, பிரயாண செலவு ஆகியவற்றை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை தகுதியின் அடிப் படையில் நியமிக்க வேண்டும். பொதுப்பணி யிட மாறுதலை பாரபட்சமின்றி முறையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக என்.முருகையா, பொதுச்செயலாளராக வை.பாண்டியன், பொருளாளராக க.ரவிச்சந்திரன், துணை பொதுச்செயலாளர்களாக வி.ராஜேந்தி ரன், ம.பெரியசாமி உட்பட 31 பேர் கொண்ட  புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.சரவணகுமார் நன்றி கூறினார்.