districts

img

மாமூல் கேட்டு சமூக விரோதிகள் தொல்லை டாஸ்மாக் ஊழியர் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

கோவை, ஜன.3- டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை அடிப்படையில் மாமூல் கொடுக்க வேண்டும் என  மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட  அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங் களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக சிஐடியு, ஏடிபி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனு வில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறு வனத்தில், கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது.  இந்தக்கடைகளில் நாள் ஒன்றிற்கு ரூ.10  கோடி அளவில் விற்பனை நடைபெற்று வரு கிறது. இந்த கடைகளில் விற்பனையாகும் பாட்டில்களின் எண்ணிக்கை அடிப்படையில்  பாட்டில் ஒன்றிற்கு 2 ரூபாய் வீதம் தினசரி  மாமூல் தர வேண்டும் என்று டாஸ்மாக்  நிறுவனத்திற்கு எவ்வித தொடர்பும்  இல்லாத தனி நபர்கள் கடைகளுக்கே நேரடி யாகச் சென்று ஊழியர்களை மிரட்டி  அச்சுறுத்தி பணம் கேட்கும் சமூக விரோத  செயல்களில் ஈடுபடுகின்றனர்.  இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் நமது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வை துறை அமைச்சரின் நற்பெய ருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் அவரது பெயரை பயன்படுத்துகின்றனர்.  

மேலும், இந்த சமூக விரோதிகளுக்கு டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொடர் பான புள்ளி விவரங்களையும் டாஸ்மாக் கடை களில் பணிபுரியும் பணியாளர்களது தொலை பேசி எண்ணையும், ஒரு சில அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பகிர்ந்து வரு வது, சட்டத்திற்கும் இயற்கை நியதிக்கும் புறம்பானது என ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். டாஸ்மாக் ஊழியர் கள் அன்றாடம் அரசின் விற்பனை பணத்தை கையாளும் பொறுப்புமிக்க பணியை செய்வ தால் இது போன்ற சமூக விரோதிகளால் டாஸ்மாக் ஊழியர்களது உயிருக்கும் உடை மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.  டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொடர்பான புள்ளி விபரங்களையும் பணியா ளர்களது தொலைபேசி எண்களையும் மேற் கண்ட சமூக விரோதிகளுக்கு பகிர்ந்திட்ட டாஸ்மாக் அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும் கண்டறிந்து அவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தமிழக அரசிற்கும், அமைச்சருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல் படும் இத்தகைய சமூக விரோதிகள் மீது காவல்துறை மூலம் உரிய சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் ஊழியர்களது உயிருக்கும் உடை மைக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என மனு அளித்தனர்.  இதில், டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் திரளானோர் பங் கேற்றனர்.