districts

img

டாஸ்மாக் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் தாக்கியவர் பிணையில் வெளிவந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி

கோவை, ஏப்.6- டாஸ்மாக் ஊழியர் மீது கொலை வெறி  தாக்குதல் நடத்தியவர் உடனடியாக பிணை யில் வெளியே வந்து மீண்டும் கொலை முயற்சி செய்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களி டையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள் ளது. கோவை தெற்கு மாவட்டத்தில், கிணத்து கடவு பகுதியில்  கடை எண் 1842-ல் ஏழுர் பிரிவு டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாள ராக ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆம்தேதி பணியில் இருந்த போது, சம்பத் என்கிற சமூக விரோதி யால் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டார். கடுமையான காயங்களுடன் கிணத் துக்கிடவு அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இச்சம் பவம் குறித்த புகாரின் பேரில் சம்பத்  என்கிற சமூக விரோதியை காவல்து றையினர் கைது செய்தனர். இவர் மீது காவல் துறையினர் சாதரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததால் அவர் உடனடியாக பிணை யில் வெளியே வந்தார். அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் அரசு ஊழியராகவே கருதப்படுகிற நிலையில், காவல்துறை மிக அலட்சியமாக சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளதை அன்றே  சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் கண்ட னத்தை பதிவு செய்திருந்தது. இந்நிலை யில், பிணையில் வெளிவந்த சம்பந்தப்பட்ட சமூக விரோதி மீண்டும் சம்மந்தப்பட்ட கடைக்கு சென்று கடை ஊழியர்களை மிரட்டியுள் ளார். மேலும், கடையின் மேற்பார்வையாளர் கடை பணியை முடித்து வீட்டுக்கு திரும்பு கையில் காரை ஏற்றி கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையறிந்த அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வா கிகள், சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று ஊழி யர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். மேலும், டாஸ்மாக் மேலாளர் மற்றும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து,  டாஸ்மாக் ஊழியரை தாக்கி சமூகவி ரோதியை சாதாரண பிரிவில் வழக்கு பதிவு  செய்து அலட்சியம் காட்டியதால், மீண்டும்  ஊழியரை கொலை செய்கிற முயற்சி நடந்துள் ளது. ஆகவே வெளியில் வரமுடியாத பிரிவில்  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என புகார் அளித்தனர். இதுகுறித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்  அந்தோணிராஜ் கூறுகையில், தமிழக அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தருகிற துறையாக டாஸ்மாக் நிறுவனம் உள்ளது. ஆனால் டாஸ் மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர் களோ கொத்தடிமைபோல வேலை செய்கின் றனர். காலமுறை ஊதியம் இல்லை, குறைந்த  பட்ச ஊதியமும் இல்லை, எட்டு மணிநேரம்  வேலை என்பதும் இல்லை, இதுபோத தென்று, உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத  நிலையே தமிழகம் முழுவதும் தொடர்கிறது.  ஆளும்கட்சியினர், அரசியல் கட்சியினர் துவங்கி, உள்ளூர் ரவுடி வரை மாமூல் கொடுத் தாகவேண்டிய அவலம் இத்துறையில் மட்டு மே உள்ளது. தரவில்லை என்றால் இதுபோ ன்ற தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.  இத்தகைய சவால்களை எதிர் கொண்டே டாஸ்மாக் ஊழியர்கள் நாங்கள்  பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம். உயி ருக்கும், உடமைக்கு எந்த உத்தரவாதம் இல் லாத நிலையில் பணியாற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டால், உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகளுக்கு எச்ச ரிக்கை செய்ய வேண்டிய காவல்துறை சாதா ரண பிரிவில் வழக்கு பதிவு செய்வதும்‘, பின் னர் பிணையில் விடுவதும் ஏற்புடையதாக இல்லை. ஆகவே, டாஸ்மாக் ஊழியர் களை தாக்கினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்கிற நிலையை காவல்துறை உருவாக்கி எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத் துகிற வகையில் செயல்பட வேண்டும் என சம் பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் மனு அளித்துள்ளோம் என்றார். முன்னதாக, கோ ரிக்கை மனு அளிக்கையில் அனைத்து டாஸ் மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.