districts

img

பதவி உயர்வை தடுத்து நிறுத்துவதா?

தாராபுரம், டிச.27-  தாராபுரத்தில் சாலைப்பணி யாளர்களின் பதவி உயர்வை கண் காணிப்பு பொறியாளர் தடுத்து நிறுத்துவதை கண்டித்து கண்களில் கருப்புத்துணி கட்டி சாலை பணி யாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்களில் கருப்புத்துணி கட்டி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இப்போராட்டத்திற்கு சங்கத் தின் கோட்டத் தலைவர் கே.வெங்கிடு சாமி தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி கோட்ட செயலா ளர் எல்.தில்லையப்பன் பேசினார். அதனை தொடர்ந்து சங்கத்தின் மாநில பொது செயலாளர் ஆ.அம்ச ராஜ் பேசுகையில், தாராபுரம் நெடுஞ் சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் அரசு விதி கள் 35,35 ஏ அடிப்படையில் சாலைப்  பணியாளர்களுக்கு வழங்கப்பட இருந்த பதவி உயர்வு வாய்ப்புகள் ஆளுங்கட்சியின் தலையீட்டால் தடுத்து நிறுத்திய திருப்பூர் கண் காணிப்பு பெறியாளர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு விதிகளை புறந்தள்ளி விதிகளுக்கு புறம்பாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படும் தாரா புரம் கோட்டப்பொறியாளரை விதி முறைகளின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வழிகாட்ட வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.  மேலும், இந்த தர்ணா போராட் டத்தில் மாநில தலைவர் மா.பால சுப்பிரமணியன்,  மாநில துணைத் தலைவர் தி.ராஜாமாணிக்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.மணி, மாவட்ட இணைச் செயலா ளர் எம்.மேகலிங்கம், வட்டத் தலை வர் கே.செந்தில்குமார், மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.செல்வக் குமார், கோட்ட இணைச்செயலா ளர் ஆ.மணிமொழி மற்றும் நிர்வாகி கள் வி.தங்கவேல், சி.மாரிமுத்து, என்.சிவக்குமார் உள்ளிட்ட சாலைப் பணியாளர்கள், அவர்களின் குடும்பங் களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டப் பொருளாளர் செ.முருக சாமி நன்றி தெரிவித்தார்.