districts

img

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி டேங்க் ஆப்ரேட்டர்கள் போராட்டம்

திருவள்ளூர், நவ.25-  டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகி யோருக்கு தமிழக அரசு  நிர்ணயித்த 7 ஆவது ஊதியக் குழு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்க வில்லை. இதனை உடனே வழங்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (நவ.25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ஆர்.புத்தகம் முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும், பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு பிடிஒ அலுவலகம் மூலம் ஊதியம் வழங்கப்பட்ட வேண்டும், அடையாள அட்டை, சீருடை, கையுறை, காலணி, தள்ளு வண்டி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்ட த்தில் வலியுறுத்தப்பட்டன.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க த்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.  கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தன், மாவட்ட தலைவர் பி.கதிர்வேல், பொருளாளர் ஜெ.ரமேஷ், துணை நிர்வாகிகள் ஆனந்தன், எஸ். குமரவேல் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் பேசுகையில், ‘திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 2018 ஆம் ஆண்டு,  நிதி ஒதுக்கிய பிறகும் சாதாரண தொழி லாளர்களுக்கு அதிகாரிகள் நிலுவைத் தொகையை வழங்காதது கண்டிக்கத்த க்கது. மேலும் மலக்குழியில் மனிதர்களை இறங்க அனு மதிக்கக் கூடாது என சட்டம் இருந்தும், துப்புரவு தொழிலாளர்களை  மலக்குழியில் இறங்குவ தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும்’ என்றார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், டேங்க் ஆப்ரேட்டர்கள் கோரிக்கை கள் தொடர்பாக பிடிஓகள் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்ப டும். தூய்மை காவலர்க ளுக்கு பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும், அடையாள அட்டை வழங்கப்படும் என உறுதியளித்தார்.