districts

img

தஞ்சை பெரிய கோயில் விழா தயக்கம் காட்டும் ஆளும் அரசு?

தஞ்சாவூர், நவ.30- தஞ்சாவூர் பெரியகோயிலின் கும்பாபிஷேக பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இதன் விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொ டங்கியது. ஆனால் கும்பாபிஷேக தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை இல்லாததால் விழா நடைபெறுமா என எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மன்னர் ராஜராஜ சோழனால் ஆறு ஆண்டுகளில் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு கட்டிய தஞ்சாவூர் பெரிய கோயில் சோழர்கால கட்டிட கலைக்கு இன்றும் மிகச் சிறந்த சான்றாக விளங்கி வருகிறது. பெரிய கோயில் 22 ஏக்கர் பரப்பளவிலும், 36 ஏக்கர் பரப்பளவில் நந்தவனம் எனப்படும் சிவகங்கை பூங்காவும் அமைந்துள்ளது. பாரம் பரியமும், கலாச்சாரத் தொன்மையும் உடைய இந்த கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட் டில் பராமரித்து வருகிறது. கோயிலின் வழிபாட்டு முறை களை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷே கம் நடத்த வேண்டும். ஆனால் பெரிய கோயில் கும்பா பிஷேகம் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.

இதையடுத்து மக்களின் வேண்டுகோளை அடுத்து தொல்லியல் துறையினர் கடந்த இரண்டு ஆண்டு களாக கேரளாந்தன், ராஜராஜன், மராட்டா நுழைவு வாயில் கள் சுத்தம் செய்யப்பட்டு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக விமான கோபுர பணி தொடங்கி தற்போது முடிவுறும் நிலையில் உள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கும்பாபிஷேகம் நடத்திட அடுத்தா ண்டு (2020) பிப்ரவரி மாதத்தில் 5,7,12 ஆகிய மூன்று தேதிகளை குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பினர். ஆனால் இதுவரை தமிழக அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ, தொல்லியல் துறையோ  கும்பாபிஷேக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கா மல் மவுனம் காக்கிறது. இதற்கிடையில் கடந்த வாரம் தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ், பெரிய கோயிலுக்கு வந்து விழா பணி களை சுமார் 5 மணி நேரம் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சி யரிடம், செய்தியாளர்கள் கும்பாபிஷேகம் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு, “இதுகுறித்து தமிழக அரசு தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறி கருத்து கூற மறுத்து விட்டார்.

இதற்கிடையில் கும்பாபிஷேக விழாவின்  முன்னோட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியுள்ளது. வரும் டிச.2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அப்போது கோயிலின் பெருவுடையார், பெரியநாயகி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கும் திரையிடப்பட்டு பூஜை கள் நடைபெறாது. அனைத்து பூஜை வழிபாடுகளும் யாகசாலை பந்தலிலே நடைபெறும். வெள்ளிக்கிழமை தொடங்கிய விழாவில் பங்கேற்ற அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகளிடமும், இந்திய தொல்லியல் துறையினரிடமும் கும்பாபிஷேகம் எப்போது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “பதில் ஏதும் இல்லை”. தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேக விழா வின் தேதியை அறிவிக்க தமிழக அரசும், அரண்மனை தேவஸ்தானமும், இந்து சமய அறநிலையத்துறையும் தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பக்தர்கள் உள்ளனர்.

தயக்கம் ஏன்?

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அரசியல்வாதிகள் வந்து சென்றால் அவர்களது பதவி நீடிக்காது என்பது போன்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்த மூடநம்பிக்கை கார ணமாக ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் பலரும் இங்கு வந்து செல்ல தயங்குகின்றனர். அதே போல பெரியகோ யில் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய யாகசாலை பூஜை கள் தொடங்கியும் இதுவரை கும்பாபிஷேக தேதியை அறிவிக்க அரசு தயங்குவது ஏன், அரசின் தயக்கத்தை பார்த்தால் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு வெளியூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் பக்தர்கள் வந்து செல்ல இருப்பதால், அதற்கான முன்கூட்டிய திட்டமிட ஏதுவாக கும்பாபிஷேகத்துக்கான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.