districts

img

நூல் வெளியீட்டு விழா

சேலம், பிப்.25- தமுஎகச, சேலம் மாவட்ட கௌரவ தலைவர்  எழுத்தாளர் இலா.வின் சென்ட் எழுதிய அக்கானி நாவல் நூல் வெளியீட்டு விழா சேலம் தமிழ்ச்சங்கம் அண்ணா நூலக முதல் தளத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலை ஞர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் மேட்டூர் வசந்தி தலை மையில் நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.  மாவட்ட துணைத் தலைவர்  தெவிட்டா மணி வரவேற்று உரையாற்றினார். மாநிலத் துணைச் செயலாளர் கருப்பு அன் பரசன், ம.செண்பகராமன், கலை மாமணி கு. கணேசன், பா.சகஸ்ரநாமம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆய்வு உரையை தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையத்தின் தலைவர் எழுத்தாளர் குமாரசெல்வா, கனவு இதழ்  ஆசிரியரும், எழுத்தாளருமான சுப்ரபாரதி  மணியன் ஆகியோர் நிகழ்த்தினார். இலா. வின்சென்ட் ஏற்புரையாற்றினார். இந்நிகழ் வில், திரளானோர் பங்கேற்றனர்.