கோவை, ஜூலை 7- கோவையில் ஞாயிறன்று நடை பெற்ற நிகழ்ச்சியில், தமுஎகச பொன் விழா இலச்சினை வெளி யிடப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனின் படைப்புலகம் நிகழ்ச்சி மற்றும் தமுஎகச பொன் விழா இலட்சினை வெளியீடு கோவை, பீளமேட்டில் உள்ள தனி யார் கல்லூரியில் ஞாயிறன்று நடை பெற்றது. இ.வெ.வீரமணி, தஞ்சை தமிழ்வாணன், கரிசல் குயில் கிருஷ்ணசாமி ஆகியோரின் பாடல் களுடன் துவங்கிய இந்நிகழ் விற்கு தமுஎகச மாவட்டத் தலை வர் தி.மணி, கவிஞர்கள் மீ.உமா மகேஸ்வரி, பானுமதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமுஎகச பொன்விழா இலச்சி னையை எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட னர்.
இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல் வன் தொகுத்த ‘முதல் 50 ஆண்டு கள் சிறுகதை தடங்கள்’ நூல் வெளி யீடு நடைபெற்றது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் நூலை வெளியிட அழகன் கருப்பண்ணன், பூஜா, க.பழனிச்சாமி, எஸ்.ஜெயபிர காஷ், அ.விஸ்நாதன், ஹரிஹரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளர் கமலாலயன் தொகுத்த ச.தமிழ்ச்செல்வன் படைப்புலகம் நூலை, எழுத்தாளர் ச.பாலமுருகன் வெளியிட ப.பா.ரமணி, மு.கோதண்ட ராமன், கி. ராமதாஸ், எழுத்தாளர் இளஞ் சேரல், கவிஞர் பெ.சக்திவேல், சி. தனபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இலக்கிய சந்திப்பு
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, தமுஎகச கோவை மாவட்டக்குழு சார்பில் 250 ஆவது இலக்கியச் சந் திப்பாக ச.தமிழ்செல்வன் படைப்பு கள் குறித்த ஆய்வரங்கம் நடை பெற்றது. சு.வெங்கடேசன் எம்.பி., எழுத்தாளர் மு.ஆனந்தன், கவி ஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், விஜயா, மு.வேலாயுதம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். “தமிழ்ச்செல் வன் சிறுகதைகளில் நிலம், மனி தர்கள்” என்ற தலைப்பில் சு.வேணு கோபாலும். “அபுனைவும் இயக்க மும்” எனும் தலைப்பில் கவிஞர் நந்தலாலா, “படைப்புகளெங்கும் பெண் வாழ்வு’ எசப்பாட்டை முன் வைத்து எழுத்தாளர் ஜெ.தீபலட் சுமி. “முதல் 50 ஆண்டுகள் சிறு கதைத் தடங்கள்” பற்றிய வாசிப் பையும், தொகுப்பையும் பற்றி ஆத வன் தீட்சண்யா ஆகியோர் உரை யாற்றினர். முடிவில், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஏற்புரையாற்றி னார்.
கவிஞர் தங்க முருகேசன், தமுஎகச மாவட்டச் செயலாளர் அ. கரீம் ஆகியோர் அமர்வை ஒருங்கி ணைத்தனர். நிகழ்ச்சியினை கவி ஞர் மைதிலி, க.ஆ.ரேணுகா தேவி, கவிஞர் ச.பிரியா, கவிஞர் செ. கவிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அ.சண்முகக்கனி நன்றி கூறினார்.