districts

img

மேகதாட்டு அணை கட்ட முயற்சித்தால் தமிழகமே போராடும்

தருமபுரி, ஆக.18- காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடை பயணம் வெள்ளியன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நிறைவடைந்த பின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷணன் பேசிய தாவது, நமது காவிரி, நமது உரிமைக்காக நடைபெற்ற நடை பயணத்திற்கு பல அரசியல் கட்சி கள் ஆதரவு தெரிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். வழி நெடுக பொதுமக்கள் பேராதரவு தந்தனர். தமிழகத்தின் 40கும் மேற்பட்ட  பெருநகரங்களுக்கு குடிநீருக்கு  ஆதாரமாக விளங்குவது காவிரி யாகும். காவிரி பல லட்சம் விவ சாய சாகுபடி நிலங்களுக்கு நீரா தாரமாக உள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டம் பாசன வசதி பெறுகிறது. காவிரி நதிநீர் கேட்டு அரை  நூற்றாண்டு காலம் நீதிமன்றத்தில் போராடினாலும், கர்நாடகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சி கள், தண்ணீர் தர மறுக்கிறது. ஒரு நதி எந்த மாநிலத்தில் உற் பத்தியாகிறதோ, அந்த மாநிலத் திற்கே, நதி சொந்தமில்லை. அந்த  நதி எந்த மாநிலத்திற்க்கு செல்கி றதோ அந்த மாநிலத்திற்கும் சொந்தம். கர்நாடகவில் இருந்து வரும் காவிரி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிசேரிக்கும் சொந் தமாகும். கர்நாடக இதை ஏற்க மறுக்கிறது.

கர்நாடக, பல ஒப்பந்தகளை ஏற்க மறுக்கிறது. அளவு கடந்து மழை பெய்யும் காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க வழியில் லாமல் உபரிநீரை திறந்து விடுகின் றனர். 50 ஆண்டு காலம் நதிநீர் பங்கீடு வழக்கு தொடுத்து தமி ழகம் போராடியது. காவிரி நடுவர்  நீதிமன்றம், 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. காவிரி நடுவர் மன்ற  தீர்ப்பை ஏற்க மறுத்து உச்சநீதி மன்றம் சென்றது கர்நாடகம். உச்ச நீதிமன்றம் விவாதித்து, இறுதி யாக 174 டிஎம்சி தண்ணீர் வழங்க லாம் என தீர்ப்பு அளித்தது. மேலும், போதிய மழை இல்லை  என்றால் தண்ணீர் கொடுப்பதற்கு  வழிமுறையும் சொல்லியிருக் கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த  வழக்குக்காக தமிழக அரசு ஆயிரம்  கோடி ரூபாய் செலவழித்துள்ளது.  இந்த தீர்ப்பு வந்த பிறகு கர் நாடக அரசு, மேகதாட்டில் அணை கட்டுவோம் என அன்றைய பாஜக  அரசு கூறியது. இதற்கு ஒன்றிய  பாஜக அரசும் ஆய்வு செய்ய அனு மதியளித்துள்ளது. எங்கேயும் அணை கட்டக் கூடாது என நீதி மன்ற தீர்ப்பில் கூறியதை மீறி,  ஒன்றிய பாஜக அரசு அனுமதி யளித்துள்ளது. மேலும் பாஜக கர்நாடகத்தில், தமிழக்கதிற்கு தண்ணீர் தர கூடாது  என போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில், அண்ணாமலை தண்ணீர் தரவேண்டும் என இரட்டை வேடம் போடுகிறார். பாஜக தமிழக மக்களுக்கு  எதி ரான கட்சி. மேகதாட்டு அணை கட்ட  முயற்சித்தால் தமிழகம் ஒன்று திரண்டு போராடும். தருமபுரி மாவட்டம் மிகவும் பின் தங்கிய  மாவட்டம் விவசாயம் இல்லை.  தொழிற்சாலைகள் இல்லை.  இளைஞர்கள் கிராமங்களில் இல்லை வெளி மாவட்டங்களுக் கும், பெங்களூரிலும் வேலை செய்து வருகின்றனர். விவசா யத்தை நம்பியுள்ள தருமபுரி மாவட்ட மக்களுக்கு வாழ்வாதா ரத்தை ஏற்படுத்தும். எனவே,  உபரிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்டால், நீராதாரம் மேம்படும். மேலும், இத்திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வரை சந்தித்து வலியுறுத்து வோம் என்றார்.