districts

கர்நாடக மாநிலத்திற்குள் லாரிகளை இயக்க வேண்டாம்

சேலம், செப்.25- கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்துள்ள நிலையில், அம்மாநி லத்திற்குள் லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர்  திறந்து விடக்கூடாது என்று கர்நாடக மாநில அரசை வலியுறுத்தி அம்மாநிலத்தில் செவ் வாயன்று (இன்று) எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனி டைய திங்களன்று பெங்களூரு நைஸ் சாலை, பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து லாரி கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் லாரி ஓட்டு நர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு கின்றனர். லாரிகளும் கடும் சேதமடைந்துள் ளன. இதுதொடர்பாக சேலத்தில் திங்களன்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க  மாநிலத் தலைவர் தனராஜ் செய்தியாளர்களி டம் கூறுகையில், காவிரி நதிநீர் பிரச்சனையா னது, இரு மாநில அரசுகள் பேசி தீர்க்க வேண் டிய விஷயமாகும். தமிழக மக்களும், கர்நா டக மக்களும் சகோதரர்களாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு லாரிகள் மீது சிலர் தாக் குதல் நடத்தியுள்ளனர். இதனிடையே கர்நாட காவில் செவ்வாயன்று (இன்று) நடைபெற  உள்ள பந்த் காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக வழியாக வட மாநிலங்களுக்கு செல் லும் லாரிகளை தமிழக எல்லையான அத்திப் பள்ளியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும். அதேபோல வட மாநிலங்களில் இருந்து கர்நாடக வழியாக தமிழ்நாடு வரும் லாரிகள் கர்நாடகாவில் வட எல்லை பகுதி யில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண் டும். பந்த் முடிந்து விட்டதா? என்பதை லாரி  ஓட்டுநர்கள் உறுதி செய்த பிறகு கர்நாடகா வுக்குள் லாரியை இயக்க வேண்டும். கர்நா டகா அரசு லாரி போக்குவரத்து என்பது பொது  போக்குவரத்து என்பதால், தமிழக லாரிக ளுக்கு கர்நாடகாவில் இயக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனராஜ் வேண்டு கோள் விடுத்தார்.