தாராபுரம், மே 29 - கல்வித் துறையில் முறைகேடாக, வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட் டணி சார்பில் திங்களன்று தாராபுரம் மற்றும் திருப்பூர் மாவட்ட அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தாராபுரம் கல்வி மாவட்ட தலைவர் இரா.குப்புசாமி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசி ரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறையில் முறை கேடாக, விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல்கள் வழங் கப்பட்டு வருவதைக் கண்டித்தும், முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்யக் கோரி யும், ஆசிரியர்களின் பதவி உயர்வு மற் றும் எஞ்சிய மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்திட வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் அருள்ஜோதி செல்வன், உடுமலை கல்வி மாவட்ட தலைவர் சீனிவாச ராக வன், குடிமங்கலம் வட்டார செயலாளர் மகாலிங்கம், உடுமலை வட்டார செய லாளர், மடத்துக்குளம் வட்டார செய லாளர், மூலனூர் வட்டார செயலாளர் கணேசன் மற்றும் ஊரக வளர்ச்சி ஒய்வு பெற்றோர் நலசங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ.மணியன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முடிவில் உடுமலை வட்டார துணை செயலாளர் சுஜாதா நன்றி தெரிவித்தார். அதே போல திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ப.கனக ராஜா, எஸ்டிஎஃப்ஐ பொதுக்குழு உறுப் பினர் ஜான் கிறிஸ்துராஜ், வட்டாரச் செய லாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜோசப், ரமேஷ் உள்ளிட்ட பொறுப்பா ளர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதி யாக சங்கர் நன்றிகூறினார். இப்போராட் டத்தில் பல்வேறு வட்டாரங்களிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்.