districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பாலியல் தொல்லை

நாமக்கல், டிச.20- நாமக்கல் வகுரம்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த வர் விஸ்வநாதன் (38). இவர்  நாமக்கலில் பிரேம் கண் ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திரு மணம் ஆகவில்லை.  இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது  சிறுமி ஒருவரை திருமணம்  செய்வதாக ஆசை வார்த்தை  கூறி, விஸ்வநாதன் கடத்தி  சென்றுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை, அந்த பகுதி யில் உள்ள அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நாமக்கல் நகர போலீ சார் விசாரணை நடத்தி, விஸ்வநாதன் மீது போக்சோ  சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய் தனர். பின்னர் நாமக்கல்  சிறையில் அடைக்கப் பட்டார்.

சுகாதார சீர்கேடு: தனியார் ஆலை மீது நடவடிக்கை

ஈரோடு, டிச. 20- புஞ்சை கிளாம்பாடி கிராமத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் தனியார் ஆலை மீது புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.  புஞ்சை கிளாம்பாடியில் “ஏஏ ஸ்நாக்ஸ்” என்ற திண்பண்ட தயாரிப்பு  ஆலை செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் இருந்து வெளி யேறும் நச்சுக்காற்றால், பள்ளி மாண வர்களுக்கும், பொதுமக்களுக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட  நிர்வாகம் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  இதேபோன்று, பள்ளி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையால் குழந்தைகளுக்கு பாது காப்பு இல்லை என பெருந்துறை டி. பள்ளபாளையம் பகுதி மக்கள் மனு  அளித்தனர். இதில், துலுக்கபாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு வருவோர் பள்ளிக்  குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும், கெட்ட வார்த்தை களைப் பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் பள்ளிக் குழந் தைகள் பாதிக்கப்படுகின்றனர். இத னால், பள்ளிக்கு அனுப்ப அச்சப்படும் நிலை உள்ளது. குழந்தைகள் அச்ச மின்றி பள்ளி சென்று வர டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதேபோல, பவானி பகுதி மக்கள் அளித்த மனுவில், ஒரு தலை முறையைத் தாண்டி பசுவேஸ்வரர் மற்றும் ஜங்கமர் வீதியில் வசித்து வரு கிறோம். ஒரு மாதத்திற்குள் இடத் தைக் காலி செய்து அடுக்குமாடி குடியிருப்பிற்குச் செல்லுங்கள் என அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள். இங்கிருந்து மீன் பிடித்தல், தறி ஓட்டு தல், தார் ஓட்டுதல், பள்ளி, கல்லூரிக்கு  செல்வது என எங்கள் வாழ்வாதாரம் முழுவதும் இங்கேயே உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பிற்குச் சென்றால், மீன்பிடி தொழில் செய்ய முடியாது. இங்கிருக்கும் போதே 4  பரிசல்கள் திருடு போய்விட்டது. மீன்  பிடி வலைகளும் காணாமல் போயுள் ளன. எனவே இங்கேயே வாழ்வா தாரத்தைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் தமிழக அணி 7 பதக்கங்கள் பெற்று அசத்தல்

சேலம், டிச.20- லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான 17 ஆவது  ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம், வெள்ளி உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்று சாதனை  படைத்தது. சேலம் மாவட்டம், ஓமலூரில் செயல்பட்டு வரும் “சேலம்  சாப்ட் டென்னிஸ் அகாடமி”யில் சேலம் மாவட்டம் முழுவதும்  உள்ள மாணவ, மாணவிகள், பல்வேறு வயது பிரிவு களின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த  அகாடமியின் சார்பாக கடந்த ஒரு வருடமாக மாவட்ட, மாநில  அளவில் பல்வேறு வயது வரம்புடைய வீரர்களுக்கான சாப்ட் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து இந்த  போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்கள் மட்டுமல்லாது தமிழ கத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 வீரர்கள் உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவி லான 17 ஆவது ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் அணி குழுப் போட்டி,  தனிநபர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் 3 தங்கப்பதக்கமும்,  ஆண்கள் அணி இரட்டையர் பிரிவில் 2 வெள்ளி பதக்கங் களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 வெண்கல பதக்கங் களை வென்று சாதனை படைத்தது.

 5 பேர் சிகிச்சை

ஈரோடு, டிச.20- ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி  பாதிப்பு அதிகளவில் இருந் தது. தற்போது கொரோனா தாக்கம் குறைய தொடங் கியது.  இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு  ஏற்பட்டு வருகிறது. இது வரை கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண் ணிக்கை 1 லட்சத்து 36  ஆயிரத்து 658 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 919  ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் 5 பேர் கொரோ னா பாதிப்புடன் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

டிச. 23 இல் திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம்

திருப்பூர், டிச.20- திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரின் விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிசம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள  சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சார்  ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயண் பங்கேற்கிறார்.

பல்லடத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

திருப்பூர், டிச.20- பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல் லடம் மின்சார வாரிய அலுவலத்தில் புதன்கிழமை நடைபெறு கிறது. இக்கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் ஜவகர்  தலைமை வகித்து மின் நுகர்வோர் குறைகளைக் கேட்டறிய வுள்ளார். எனவே, பல்லடம் பகுதி மின் நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளைத் தெரி வித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று பல்லடம் மின்  கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள் ளார்.

ரூ.1.39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

திருப்பூர், டிச.20- காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.39  லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற் றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் பகுதி யைச் சோ்ந்த 2 விவசாயிகள் 33 மூட்டை கொப்பரைகளை விற் பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை1,804 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளைச் சேர்ந்த  4 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனர். இதில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78க்கும், குறைந்தபட்சமாக ரூ.68க்கும், சராசரியாக ரூ.76க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.39 லட்சம்.  ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப் பாளா் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்.

திருப்பூர் பூ மார்க்கெட் விலை (ரூபாயில்)

மல்லி:1000
முல்லை:480
பச்சை முல்லை:480
ஜாதி மல்லி:480
சேலம் காக்கடா:240
மைசூர் காக்கடா:200
செவ்வந்தி:80 to 100
அரளி:220

அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை 

நீர்மட்டம்:48.21/60அடி  நீர்வரத்து:96கன அடி வெளியேற்றம்:157கன அடி அமராவதி அணை  நீர்மட்டம்: 89.44/90அடி. நீர்வரத்து:557கனஅடி வெளியேற்றம்:420கன அடி

சுகாதார குறியீட்டில் தருமபுரி பின்தங்கியுள்ளது: ஆட்சியர் கவலை

தருமபுரி, டிச.20- தருமபுரியில் மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை தொடர் பான விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி தனியார் விடுதி யில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பேசுகையில், தருமபுரி மாவட்டம் அரசின் பல்வேறு குறியீடுகளில் மற்ற மாவட்டங்களை ஒப்பி டும்பொழுது பின்தங்கிய மாவட்டமாக இருந்த நிலையில், தற்பொழுது அனைவரின் முயற்சியின் காரணமாக வளர்ந்து வரும் மாவட்டமாக திகழ்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் முக்கியமாக இருந்தாலும், மனிதவளம் குறி யீடுகள் மேம்பாடு அடையும் போதே ஒரு நாட்டின் உண்மை யாக வளர்ச்சியாக கருதப்படுகிறது.  தருமபுரி மாவட்டம் தற்பொழுது வளர்ச்சி அடைந்து வந்தா லும், மருத்துவம் மற்றும் சுகாதார குறியீடுகளை பார்க்கும் போது குழந்தை இறப்பு விகிதம், பிரசவத்தின்போது தாய் மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சில குறியீடுகளில் பின் தங்கிய நிலையில் உள்ளதால் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இக்குறியீடுகளை முன்னேற்றம் அடைய  செய்திட வேண்டியது நமது அனைவரின் கடைமையாகும். இதில் குறிப்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் ஒத்துழைப்பின் மூலம் இக்குறியீடுகளை மேம்படுத்திட முடியும். அனைத்து நிலைகளிலும் விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இக்குறியீடுகளில் முன்னேற் றம் ஏற்படும், என்றார்.

பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு

உதகை, டிச.20- தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் வரை காலி யாக இருந்த ஊராட்சிகளின் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் திங்களன்று மாநிலம் முழுவதும் நடை பெற்றது. இதன்படி நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட பாலகொலா ஊராட்சியில் காலியாக இருந்த துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த ஊராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பால கொலா ஊராட்சி தலைவர் உட்பட 16 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் மஞ்சை வி.மோகன் 15  ஆவது வார்டு உறுப்பினரும், தங்காடு - ஓரநள்ளி 9 ஆவது வார்டு உறுப்பினருமான நாகராஜன் ஆகியோர் போட்டியிட்ட னர். தேர்தலில் இருவரும் தலா 8 வாக்குகள் பெற்றதால், இரு வரின் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க, தேர்தல் அலுவலர் முடிவுச்செய்தார். அதில் மஞ்சக்கொம்பை 15 ஆவது வார்டு உறுப்பினர் மஞ்சை வி.மோகன் தேர்ந்தெ டுக்கப்பட்டார். இதையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றி தழை தேர்தல் அலுவலரும், உதகை ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருமான விஜயா வழங்கினார்.

சிபிஎம், மலைவாழ் மக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

சமுதாய உரிமைகள் வழங்கிட ஆணை

பொள்ளாச்சி, டிச.20- பழங்குடியின மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க சிறுவன மக சூல் சேகரிப்பது உள்ளிட்ட சமுதாய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து பொள்ளாச்சி பகுதி யில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டம் நடத்தி வந்த நிலை யில், இதனையேற்று சமுதாய உரி மைகள் வழங்க பொள்ளாச்சி சார்  ஆட்சியர் உத்தரவு வழங்கியுள்ளது பழங்குடியின மக்களிடையே மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமலை, வால்பாறை ஆகிய தாலுகாவிற்குட்பட்ட வனக் குடியிருப்பு பகுதிகளில் வாழுகிற மற்றும் சமவெளி பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த  நவ.29 ஆம் தேதியன்று பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில் சுமார் 400க்கும் மேற் பட்ட பழங்குடி மக்கள் பங்கேற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத் தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்களோடு அதிகாரி கள் பேச்சுவார்தை நடத்தினர். இதில், முன்வைக்கப்பட்ட கோரிக் கைகள் குறித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன்படி, பழங்குடியின மக்க ளின் நீண்ட கால கோரிக்கையான வன உரிமைச் சட்டம் 2006-ன் படி, சமுதாய உரிமைகள் வழங்கிட அதற் கான நடவடிக்கைகளில் ஒன்றாக, சிறுவன மகசூல் சேகரம் செய்யப் படும் பகுதிகளை வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து கூட்டு புலத் தணிக்கை செய்து அறிக்கை அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் நவ.30 ஆணையிட்டதின் பேரில், பொள் ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் ஆணையிட்டு உத்தரவு பிறப்பித் துள்ளார். மேலும், அந்த ஆணை யில், குறிப்பிட்ட தேதியில் குறிப் பிடப்பட்டுள்ள வன கிராமம் ஆய்வு  செய்ய வேண்டும் என்பதில்லாமல், மேலும், நியமனம் செய்யப்பட் டுள்ள கிராம நிர்வாக அலுவலர் தணிக்கை செய்ய செல்லும்போது காலுறை, பூட்ஸ்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்ற வற்றை ஏற்பாடு செய்திட சம்பந் தப்பட்ட வட்டாட்சியரை பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இந்தியா சுதந்தி ரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பழங்குடி மக்கள் வாழ் கிற வன கிராம பகுதிகளுக்கு செல்ல அதிகாரிகளுக்கு பூட்ஸ்கள் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியிலேயே வசிக் கும் பழங்குடியின சிறுவர்கள் முதல் முதியவர்களின் வேதனை எவ்வ ளவு கொடுமையானதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது என சிபிஎம் ஆனைமலை தாலுகா செயலாளர் எஸ்.பரமசிவம் தெரிவித்துள்ளார்.

குட்கா பறிமுதல்

கோவை, டிச.20- கோவை ரயில் நிலையத் தில் ரயில்வே போலீசார் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போது, தன்பாத்திலி ருந்து ஆலப்புழா செல்லும் ரயில் கோவை வந்தது. இதை யடுத்து போலீசார் ரயிலில் ஏறி சோதனை செய்தபோது, கழிவறை அருகே ஒரு வெள்ளை மூட்டை இருந் தது. இதனால், சந்தேகம டைந்த போலீசார் அதனை சோதனை செய்தபோது, 9 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.