தருமபுரி, ஜூன் 6- பழங்குடியின மக்களின் நிலத்தை மீட் கும் வரையில் எங்களது போராட்டம் தொட ரும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அறிவித்துள்ளது. மலைவாழ் மக்களின் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந் திரள் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தின்போது, அரூர் அருகே உள்ள சிட்டிலிங் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நிலங்களை ஆதிக்க சாதியினர் அபகரித்துள்ளதை மீட்டு, பாதிக் கப்பட்ட பழங்குடியின மக்களிடம் ஒப்ப டைக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி வட் டம், நொனங்கனூர் கிராம பழங்குடியின மக்கள் காலங்காலமாக பயன்படுத்தும் சுடு காட்டு பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வேண்டும். பழங் குடியின மக்கள் மீது கோட்டப்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி காவல் துறையினரால் பதியப் பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வேண் டும். ஆலமரத்தூர் சுடுகாடு 20 ஆண்டு கால மாக மக்கள் பயன்படுத்தி வருவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின்படி நிலப்பட்டா, வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. அப்போது, மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு பேசுகை யில், அரூர் வருவாய் கோட்டத்திற்குபட்ட சிட்டிலிங், சித்தேரி ஆகிய மலைக்கிராமங்க ளில் உள்ள பழங்குடி மக்களின் நிலங்களை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தில் அல்லாதோர் ஆக்கிரமிப்பு செய் துள்ளனர். இந்த நிலத்திற்கான பட்டாவும், நிலப் பதிவும் செய்துள்ளனர். தமிழ்நாடு நிலை ஆணையில், பழங்குடி நிலத்தை பழங்குடி அல்லாதோர் வாங்கினால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதியன்று இதற்கான அர சாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை யில், பழங்குடி அல்லாதோர் பெயரில் நிலம் எப்படி பதிவு செய்யப்பட்டது. சட்டத்திற்கு புறம் பாக நிலத்தை பதிவு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் துணை நிற்கின்றனர். எனவே, பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டு பாதையை மீட்டுத்தர வேண்டும். மேற்கண்ட கோரிக் கைகளுக்கு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் களத்தில் இறங்கி நிலத்தை மீட்போம், என்றார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் ஏ.அன்புரோஸ் தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் ஏ.கண்ணகி, மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ. குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.குமார், தனுசன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சி.வஞ்சி, ஒன் றிய செயலாளர் ஏ.நேரு, மலை சங்க பொறுப் பாளர் எஸ்.கே.கோவிந்தன், குறுமன்ஸ் பழங் குடி சங்க மாவட்ட செயலாளர் சொக்கலிங் கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்க தலைவர்கள் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜசேகரனிடம் அளித்தனர்.