districts

img

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 23- சாலை பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் சத்தியமங்கலம் உதவி கோட்ட  பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஊதியத்தைப் பிடித்தம் செய்து, பழிவாங்கும் நடவ டிக்கையில் ஈடுபடும் கோட்டப் பொறியாளர் மற்றும் அவரைப்  பாதுகாக்கும் தலைமை பொறியாளர் ஆகியோர் தங்களது போக்கை கைவிட வேண்டும். கோபி கோட்டத்தில் நடை பெறும் விதி மீறல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மீது முதல்வர் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உட்கோட்ட தலைவர் கே. முருகன் தலைமை ஏற்றார். மாநிலச் செயலாளர் சு.செந்தில் நாதன் சிறப்புரையாற்றினார். கோட்ட தலைவர் என்.முருக வேல், செயலாளர் ரா.கருப்புசாமி, பொருளாளர் ஜெபமாலை ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், உட்கோட்ட பொருளாளர் எஸ்.சரவணகுமார் நன்றி கூறினார்.