கோவை, ஜூன் 30- பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயி களுக்கு, தமிழக அரசு உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் வி. ஆர்.பழனிசாமி, மாவட்டத் தலை வர் வி.பி.இளங்கோவன் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில், 1980 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழ கம் துவங்குவதற்கு முன்பு அப்பகு தியைச் சுற்றியுள்ள சுமார் 700க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தினை அரசு கையகப்படுத்தியது. அது சமயம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடுத் தொகை போதுமானதாக இல்லை என விவ சாயிகள் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சுமார் 25 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று 2007 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அரசு நீதிமன்ற தீர்ப்படின்படி பணம் தரவில்லை. 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டத்தா லும், அன்றைய கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜ னின் முயற்சியாலும் ஒரு பகுதி தொகையான ரூ.43.5 கோடியை மட் டுமே அரசு வழங்கியது. மீதி தொகை தராமல் நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல்முறையீடு செய் யப்பட்டது. நீதிமன்றமும் 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு உரிய தொகையை இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. பலமுறை மனுக்கள் மூலம் அரசிடம் கேட்டபோது, பணம் கிடைக்க ஏற்பாடு செய்வ தாக கூறப்பட்டது. இந்நிலையில், வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் இதுதொடர்பாக மனு அளித்தபோது, அரசு மேல்முறை யீட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே, தான் எதுவும் செய்ய இய லாது என ஆட்சியர் கூறிவிட்டார். நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு எதிராக மேல்முறையீட்டுக்கு அரசு செல்வது என்பது விவசாயிகளை வஞ்சிக்கின்ற செயல். எனவே, தமி ழக அரசு பரிசீலனை செய்து வய தான காலத்தில் வாழ்க்கைக்கு போராடும் விவசாயிகளுக்கு நீதி மன்ற தீர்ப்பின்படி உரிய தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.