தருமபுரி, ஆக.29- நூறாண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்துவரும் விவசாயி களை, வனத்துறைக்கு சொந்த மான இடம் என மிரட்டி வெளி யேற்ற துடிக்கும் வனத்துறையின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டத்தில் பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மாகந்திரமங்க லம், அண்ணாமலைஅள்ளி, ஐக்க சமுத்திரம் ஆகிய ஊராட்சிகள் உள் ளன. இந்த ஊராட்சிகளுக்குட்பட்ட சுமார் 40 கிராமங்களில் ஏறத்தாழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மிகவும் பிற்படுத்தப்பட் டோர், பட்டியலின, இருளர், குரு மன்ஸ் ஆகிய சமூக மக்கள் அதிக ளவில் வசித்து வருகின்றனர். மிக வும் பின்தங்கிய நிலையில் வாழும் இப்பகுதி மக்கள், 100 ஆண்டுக ளாக மேற்கண்ட ஊராட்சிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் தங்கள் அனுபவத்தில் சாகுபடி செய்து வரு கின்றனர். அரை ஏக்கர் முதல் 5 ஏக் கர் வரை வைத்துள்ள சிறு விவசாயி களான இவர்கள், இருவகை (நஞ்சை, புஞ்சை) நிலங்களிலும் மா, தென்னை, வாழை, நாகமரம் மற்றும் நெல், ராகி, தக்காளி, கம்பு , சோளம் மற்றும் காய்கறி வகைகள் என பயிரிட்டு, அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். 5 தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் இவர் களுக்கு வேறு வாழ்வாதாரம் ஏது மில்லை. இவர்களில் பெரும்பகுதி யினர் விவசாய நிலத்திலேயே வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மின் இணைப்பு, குடி நீர் வசதி, ரேசன் கடை, பள்ளி உள் ளிட்ட வசதிகள் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரடு முரடாக இருந்த நிலத்தை, தங்களது சொந்த குடும்ப உழைப் பினால் சமன் செய்து, விவசாயம் செய்து வருகின்றனர். தருமபுரி, கிருஷ்ணகிரி ஒன்றுபட்ட மாவட்ட மாக இருந்தபோது, கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மூலம் இந்த சாகு படி விவசாயிகளுக்கு பட்டா வழங் கப்பட்டது. இந்நிலையில், 1988 ஆம் ஆண்டு, இந்த விவசாயிகளின் நிலங் களை வருவாய்த்துறையினர், வனத் துறையிடம் ஒப்படைத்து விட்டதா கக்கூறி, விவசாயிகளை வனத்து றையினர் வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். மேலும், வனத்துறை தற்போது மாமரங்களுக்கு வரி கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய் கிறனர். வரிகட்டவில்லை என்றால் நிலத்தை ஏலம் விடுவோம், என மிரட்டி வருகின்றனர். இதனிடையே, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், துணைத்தலைவர் கே.என்.மல்லை யன், நிர்வாகிகள் சுப்பிரமணி, சிவ லிங்கம் ஆகியோர் வனத்துறை யினரால் பாதிக்கப்படும் வீராசா னூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகளை சந்தித்து, கலந்து ரையாடினர். அப்போது, 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டத்தின்படி, நிலப் பட்டா வழங்க வேண்டும். மாமரங்க ளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று வனத்துறையினர் விவசாயி களை நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். நூறு ஆண்டுக ளாக விவசாயிகள் சாகுபடி செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையினர் தொடர்ந்து விவசாயிகளுக்கு தொந்தரவு கொடுத்தால், தருமபுரி யில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் போராட்டம் நடத்தப் படும், என தெரிவித்தனர்.