districts

img

பணி நிர்பந்தத்தால் மின் ஊழியர் உயிரிழப்பு

பொள்ளாச்சி, ஏப்.11- பொள்ளாச்சி அருகே பணி நிர்பந்தத் தால், உயர்மின் பாதையில் பணிபுரிந்த மின்  ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பத்திற்கு நீதி கேட்டு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டமங்கலத்தைச் சேர்ந்த வர் சின்னத்தம்பி (35). இவர் பொள்ளாச்சி மின் கோட்டத்தில் கேங்மேனாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், சின்னத் தம்பி ஞாயிறன்று அதிகாலை 2 மணியள வில், பொள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூ ரில் செல்லும் உயர்மின் பாதையில் பணி செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி யதில், சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

இந்நிலையில், பணி நிர்பந்தம் காரண மாக தான் சின்னத்தம்பி உயிரிழந்தார் என்று  குற்றஞ்சாட்டி, பொள்ளாச்சி தமிழ்நாடு மின் சார வாரியம் செயற்பொறியாளர் அலுவ லகத்தை கேங்மேன் மின் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் ஊழியர்கள் கூறுகையில், பொள்ளாச்சி மின் வாரிய கோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் (கேங்மேன்) சேலம் மாவட்டத்திலிருந்து வந்து தங்கி வேலை செய்கிறோம். முதல் மூன்று ஆண்டுகள் வரை (கன்சாலிடேசன்) பயிற்சி காலமாக பணி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் உயர்மின் ஓட்டபாதையில் பயிற்சி ஊழி யர்களை பணியில் விதியின்படி அமர்த்தி யிருக்கக்கூடாது.

ஆனால், நிர்வாகத்தின் நிர்பந்தத்தால் வலுக்கட்டாயமாக வார விடு முறை கூட இன்றி நாங்கள் வேலை செய்து  வருகிறோம். இச்சூழலில் ஞாயிறன்று மின் சாரம் தாக்கி  சின்னத்தம்பி உயிரிழந்து விட் டார். எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வாரவிடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைக்கேட்ட செயற்பொறியாளர் செந் தில்வேல், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) உடுமலை கிளை  செயலாளர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி  கிளை பொறுப்பாளர் கோவிந்தன், தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதில், மேற்பார்வை பொறியாளருக்கு தக வல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படுவ தாக செயற்பொறியாளர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென் றனர்.