districts

img

புதிய காவல் நிலையம்: காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

திருப்பூர், டிச.30- திருப்பூரில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திரு முருகன்பூண்டி புதிய காவல் நிலையத்தை தமிழக முதல் வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத் தார். திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமு ருகன் பூண்டி,ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஒரு கோடியே  30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்  நிலையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி  மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மட்டும்  விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காவல் நிலை யத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மாந கராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர்  பிர பாகரன், மாநகர துணை காவல் ஆணையர்கள் அபினவ்  குமார், வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.