districts

img

தமிழக முதல்வர் கோவை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கோவை, மே 16-  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை  வருகையையொட்டி பாது காப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  நீலகிரி மாவட்டம், உதகையில் வருகிற  மே 20 ஆம் தேதி மலர்கண்காட்சி மற்றும் 21ஆம் தேதி அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூல மாக வருகிற 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோவைக்கு வருகிறார். இதன்பின்னர் கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 19 ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமி ழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண் காட்சியை திறந்து வைத்து பார்வையிட உள்ளார். இதனைத் தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் தொழில் முனை வோர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  பின்னர், மாலையில் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டத் தில் நடைபெறும் விழாவிற்கு செல்கிறார். இதையடுத்து தமிழக முதல்வரின் கோவை வருகையொட்டி பலத்த  போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.