districts

img

வைக்கம் போராட்டத்தில் - கோவை அய்யாமுத்து

வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் இணைந்து எழுச்சி யோடு நடத்தி வருகிறது. வைக்கம் போ ராட்டத்தில், பங்கேற்று சிறை சென்ற அய்யா முத்து அவர்களை நினைவு கூர் வது பொருத்தமாக இருக்கும்.   1898ல் பிறந்த கோவை அய்யா முத்து, 1921ல் மகாத்மாகாந்தி கோவைக்கு வருகை தந்த போது, அவரது உரையை கேட்டு சுதந்திரப்போ ராட்டத்தில் தன்னை இணைத்து கொண் டார். செயல் திறனும், சொல்வன்மை யும் ஒருங்கே அமைந்தவர். தமிழ கத்தில் கதரை நிலைபெறச்செய்ததில் தமிழ்நாடு சர்க்கா சங்கத்தை உருவாக் கியதில் பெரும் பங்காற்றினார். அத னால், கதர் அய்யாமுத்து என்று அழைக் கப்பட்டார். திருப்பூரில் காதி போர்டு தலைவராக இருந்த தந்தை பெரியா ரோடு நன்கு தொடர்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள வைக்கத்தில் நிலவிய சாதிய வன் கொடு மைக்கு எதிராக பட்டியலின, பிற்படுத்தப் பட்ட மக்கள் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நடப்பது தீட்டு என்ற  நிலைக்கு எதிராக நடைபெற்ற போராட் டத்தில் தந்தை பெரியாரோடும், சேலம் ராமநாதனோடும் கோவை அய்யா முத்து பங்கேற்றார்.

ஊர் ஊராக போராட் டத்திற்கு ஆதரவாக நிதியினை பெற்றுக் கொண்டு சென்ற போது, பொதுக்கூட் டங்களில் பேச கூடாது என திருவாங் கூர் சமஸ்தான ஆணையை அவருக்கு  தெரிவிக்கப்பட்டது. இந்த தடை உத்த ரவை யார் மீறுவதென திருஉளசீட்டு    போடப்பட்டபோது, அய்யாமுத்து  பெயரே வந்தது. எனவே, சிறையின் கீழ் என்ற ஊரில் அரசின் பிற்போக்கு தனத்தையும் பட்டி யலின மக்களின் சம உரிமைக்கான நியா யத்தையும் கோவை அய்யாமுத்து பேசி னார். இவரது பேச்சை கேட்ட காவல் துறை அதிகாரி டயூபீட், இவரை தீ  பொறி என்று வர்ணித்தார். நாளிதழ்க ளான வீரகேசரி, யுவகேசரி வியந்து பாராட் டின. பறையருக்கும், இங்கு தீயருக்கும் புழையருக்கும் விடுதலை என்ற பாடலை பாடிய போது வைக்கம் வாழ் மலையாள மக்கள் வீருகொண்டு  எழுந்தனர். கோட்டையில் நடந்த  விசாரணையில், கோவை அய்யாமுத் துக்கு ஒரு மாத தண்டணையும் 15 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வைக்கம் போராட்டத்தில் முதன் முதலாக  தண்டனை பெற்றவர். 31 நாள் சிறைவாசகத்திற்கு பிறகு அய்யாமுத்து வெளியே வந்த  போது வரலாறு காணாத கூட்டம்  அவரை வரவேற்றது. அதில் ராஜாஜி யும் ஒருவர். திருவனந்தபுரம் கோட்டை  மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அவ்வளவு பெரிய  கூட்டத்தை பார்த்தது இல்லை என சம தர்ஷ்னி பத்திரிக்கை ஆசிரியர் பாலகி ருஷ்ணன் கூறினார். தொடர்ந்த கோவை  அய்யாமுத்து வைக்கத்தில் வரலாறு சிறப்புமிக்க போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கு உதவிட தமிழ கத்தில் பெரும் நிதியை திரட்டி உதவி அளித்தார். தனது இறுதி காலத்தில் அய்யா முத்து, 1951-ல் பொள்ளாச்சியிலிருந்து கோவை வரும் சாலையில் கோதவாடி பிரிவில் 23 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அதற்கு காந்தி பண்ணை என்றும் அதில் உள்ள கட்டடங்களுக்கு ராஜாஜி இல்லம் என்றும் பெயர் இட் டார். கோவை அய்யமுத்து அவரது மனைவி கோவிந்தம்மாள் ஆகியோர் விருப்பத்திற்கு இணங்க அந்த நிலம்  சர்வோதய சங்கத்திற்கு வழங்கப்பட் டுள்ளது. அவர்கள் வாழ்ந்த இல்லத் தை ஒட்டி கிராமிய தொழில் நிறுவ னங்கள் எழுந்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திக்கொண்டி ருக்கின்றன. அவர்களது நினைவிடம் இளைய தலைமுறைக்கு தியாக உணர்வை போதித்துக்கொண்டிருக் கிறது. - யு.கே.சிவஞானம்