சேலம், பிப்.22- அனைத்து தொழிலாளர்களுக் கும் தினசரி வேலை வழங்க வலியு றுத்தி, தலேமா எலக்ட்ரானிக் ஆலை நுழைவாயில் முன்பு தொழிலாளர் கள் உண்ணாவிரத இயக்கத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில் தலேமா எலக்ட்ரானிக் (இந் தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவ னம் செயல்பட்டு வருகிறது. இந்நிறு வனத்தில் தொழிலாளர் நலன் மற் றும் திறன் மேம்பாட்டுத் துறையின் உத்தரவின் பேரில், கடந்த 15.12.2023 முதல் 31.3.2024 வரை தற்காலிகமாக லே-ஆப் முறையில் தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நி லையில், தொழில் தகராறு சட்டத்தில் லே-ஆப் சம்பந்தமாக கூறப்பட்டுள்ள எந்த நடைமுறையும் பின்பற்றாமல் மேற்படி காலத்திற்கான லே-ஆப் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். புதிய சம்பள கோரிக்கை குறித்து சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனைத்து தொழிலாளர் களுக்கும் தினசரி வேலை கிடைப் பதை உறுதிசெய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் டிஸ்ட்ரிக்ட் ஜெனரல் லேபர் யூனியன் (சிஐடியு) தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆலை நுழைவாயில் முன்பு நடை பெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத் தின் தலைவர் எஸ்.கோபு தலைமை வகித்தார். ஜெனரல் லேபர் யூனியன் சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பொன்.ரமணி போராட் டத்தை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், மாவட்டத் தலைவர் டி.உதய குமார், சங்கத்தின் செயலாளர் ராதா கிருஷ்ணன் உட்பட திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.