districts

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய சமம் கூடுகை

திருப்பூர், செப்.11- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் சமம் உபகுழு சார்பில் பாலின  சமத்துவத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உபகுழுவின் மாநாடு ஞாயிறன்று திருப்பூர் பார்க் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாவட்ட முழுவதிலும்  இருந்து பிரதிநிதிகளாக 130க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் சிறப்பு கருத்தரங்கமாக பெண்களின் சமூகப் பங்களிப்பின் அவசியம் குறித்து  விழித்தெழு என்ற தலைப்பில் பேரா. மோகனா மற்றும் பெண்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்புகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட மலர் சுய உதவிக் குழுவின் செயலாளர்  ஜினோபாய் ஆகியோர் உரையாற்றினர். இந்த மாநாட்டில், கடத்த 28 ஆண்டு களாக கனவாகவே உள்ள சட்டமன்ற,  நாடாளுமன்றங்களில் பெண்களுக் கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை விரை வாக அமல்படுத்த கோரி கையெழுத்து இயக்கம் நடத்துவது. திருப்பூரில் இளம் தலைமுறையினரிடம் தலை  எடுக்கும் போதை பழக்கத்தினால் ஏற்ப டும் பெண்கள் மீதான வன்முறைகளில்  இருந்து பெண்களுக்கான  பாதுகாப்புக் கான சூழல், திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்த  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இத்தகவல் களை சமம் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ராணிராமமூர்த்தி தெரிவித்தார்.