ஈரோடு, டிச.21- ஜம்பை பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பவானி தாலுகா 10 ஆவது மாநாடு தம்பி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.விஜயராகவன் சிறப்புரை யாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி வாழ்த்துரையாற்றினார். இதில், ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனை இடத்தில் அரசே அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். ஜம்பை பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னையைப் போல 60 வயதை கடந்தவர் களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் பவானி தாலுகா தலைவ ராக எஸ்.தம்பி, செயலாளராக எஸ்.மாணிக்கம், பொருளாள ராக பி.கண்ணன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட தாலுகாக் குழு தேர்வு செய்யப்பட்டது.