கோவை, டிச.12- கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர் காலப் பிந்தைய கணக்கெ டுக்கும் பணி தொடங்கப்பட் டது. தேசிய புலிகள் ஆணை யத்தின் அறிவுறுத்தல் படி ஆனைமலை புலிகள் காப்ப கம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, மானாம் பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது. இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் மாமிச உண்ணிக ளான புலி, சிறுத்தை, கருஞ் சிறுத்தை ஆகியவற்றின் கால் தடங்கல், நக கீறல்கள், விலங்குகளின் எச்சங்கள் வைத்து கணக்கு எடுக்கப் படுகிறது. அதேபோன்று, காட்டுயானை, மான், பறவை, தாவர இனங்கள் கணக் கெடுக்கும் பணியும் நடை பெற உள்ளது. இறுதியாக கணக்கெடுக்கும் பணி முடி வுற்று தேசியப் புலிகள் ஆணையத்திடம் கணக்கெ டுப்பு குறித்த அறிக்கை ஒப்ப டைக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித் தனர். பொள்ளாச்சி வனக் கோட்டத்திற்குட்பட்ட நவ மலை பகுதியில் வனவர், வனக்காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.