நாமக்கல், பிப். 17- கரும்பு வெட்டும் தொழிலாளர்க ளுக்கு அடையாள அட்டை கேட்டு தமிழ் நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங் கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் திங்களன்று திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்க பொறுப்பு தலைவர் முரு கன் தலைமை ஏற்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் இ.கே.முருகன் துவக்கி வைத்து வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் சி.துரைசாமி ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரையாற்றி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு கரும் பாலை நிர்வாகம் அடையாள அட்டை வழங்கிட வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமும் அரசு நிர்வாகமும் நிர்ணயித்திட வேண் டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தை வாழ்த்தி, சிஐடியு மாவட்ட நிர் வாகி ஐ.ராயப்பன், ஒன்றியப் பொருளா ளர் கோவிந்தசாமி, ஒன்றியச் செயலா ளர் குருசாமி உள்ளிட்டோர் உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், திருச் செங்கோடு கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.