இளம்பிள்ளை, ஜன.25- இளம்பிள்ளை அருகே விவசாய தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.2 லட்சம் மதிப்பிலான கரும்புகள் சேத மானது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமா கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியைச் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் (70). இவர் தனது தோட்டத் தில் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில், திங்க ளன்று மதியம் திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பரவிய தால், இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து ஜெயபால் கூறுகையில், ஒரு வாரத்தில் அறு வடை செய்ய இருந்த கரும்புகள் தீயில் கருகி சேதமானது. இதன் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய் என்று வேதனை தெரிவித்தார். மேலும், தனது தோட்டத்தின் அருகே இளம் பிள்ளை எல்லையில் சுமார் 10 அடி உயரத்துக்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதில் பற்றவைக்கப்படும் தீயால் கரும்பு தோட்டம் நாசமாகியுள்ளது என்றார். இதுகுறித்து, மகுடஞ்சாவடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.