districts

மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் தொடரும் அவலம்

உடுமலை, டிச.25- மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் உடல் நிலை சரி யில்லாத நபர்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவல நிலை  தொடர் கதையாக உள்ளது. உடுமலை தாலுகா ஈசல்திட்டு மலைவாழ் மக்கள் குடியி ருப்பில் ராஜன் என்பவருக்கு திங்களன்று உடல் நிலை சரியில் லாமல் போனதால், அப்பகுதி மக்கள் ராஜனை தொட்டில் கட்டி  தூக்கி வந்துள்ளார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஈசல்திட்டு பகுதியில் இருந்து கொங்குரார் குட்டை வழியாக ஜல்லி பட்டியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வர முறையாக  பாதை இல்லை. இதனால், உடல் நலம் சரி இல்லாதவர்களை  கொங்குரார் குட்டை வரை தொட்டில் கட்டிதான் தூக்கி வர  வேண்டிய நிலை உள்ளது. எனவே கொங்குரார் குட்டை பகுதி யில் இருந்து ஈசல் திட்டு பகுதிக்குப் பாதை வசதி ஏற்படுத்தி  தர வேண்டும். மேலும் மலை அடிவார பகுதியில் முதலுதவி  செய்யும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் ஆரம்ப சுகாதார  நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த னர்.