districts

img

கோவை அரசு மருத்துவமனையில் இயந்திரம் பழுதால் சீறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் தவிப்பு

கோவை, நவ.26- கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சீறுநீரகப் பிரிவில் உள்ள இயந்திரம் பழுதால் நோயாளிகள் கடுமை யாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.  கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் சிறுநீரக இயல் துறை செயல் பட்டு வருகிறது. இந்த துறையில் சிறு நீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு டயா லிஸிஸ்காக வந்து செல்கின்றனர். இதில்  நாளொன்றுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் 50  பேர் வீதம் டயாலிஸிஸ் செய்யப்படு கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளா கத்தில் இரண்டு ஆர்.ஓ. யூனிட்டுகள் உள்ளன. இதனிடையே ஒரு ஆர்.ஓ. யூனிட்  பழுதடைந்துள்ளது. ஒன்று மட்டுமே செயல் படுகிறது. இதனால் குறித்த நேரத்தில் டயா லிஸிஸ் சிகிச்சை செய்ய முடிவதில்லை. 50 பேருக்கு சிகிச்சை அளிக்கும் நேரத்தில், தற்போது 20 பேர் வரை மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனால், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வர்கள் சிறுநீரக இயல் துறை அருகில் உள்ள  தரையில் படுத்தபடி சிகிச்சைக்காக காத்தி ருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நோயாளிகளின் உறவி னர்கள் கூறுகையில், “கடந்த ஒரு வாரத் திற்கு மேலாக இந்த நிலை நீடித்து வரு கிறது. டயாலிஸிஸ் சிகிச்சை என்பது சிறுநீரக  கோளாறு ஏற்பட்டவர்களுக்கு கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று. குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் நோயா ளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் இதில் அலட்சியப்போக்கை கடைபிடிப்பது ஏற்புடையதல்லை.” என்றனர்.  இதுகுறித்து அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், இதுகுறித்த புகார்கள் வந்தது. உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். நோயாளிகள் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் சிகிச்சை மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.