உதகையில் 10 வீடுகளில் திடீர் விரிசல்
உதகை, நவ.22- உதகை அருகே 10 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே கோக்குடல் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை சுமார் 10 வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்த தைக்கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஒவ்வொருவரும் பலவராக காரணங்கள் கூறிய தால் பொதுமக்கள் கூடுதல் பீதி அடைந்தனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், திங்களன்று இரவு நில அதிர்வு ஏற்பட்டதால்தான் இந்த பிளவு உண்டாயிருக்கிறது. குறைந்த அளவு நில அதிர்வாக இருந்ததால் யாரும் உணராமல் இருந்திருக்கலாம். இதன்மூலம் வீடுகள், சமுதாயக்கூடம் உட்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்க னவே 6 மாதத்திற்கு முன் இதே பகுதியில் சாலையோரம் பிளவு ஏற்பட்டது. மேலும் 30 ஆண்டுகளுக்கு முன் இங்கு நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது, என்றனர். இதைத்தொடர்ந்து புவியியல் துறை இணை இயக்குனர் (பொ) உத்தரவின் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் சரவணன் தலைமையிலான குழு வினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதன்பின் அவர்கள் கூறுகையில், இந்த பகுதி நில அதிர்வால் பாதிக்கப் படக்கூடிய மண்டலம் கிடையாது. சமீபத்தில் பெய்த அதிக மழை பொழிவு காரணமாக அருகில் உள்ள மலையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் சில நேரங்களில் பூமிக்கு மேலேயும் சில நேரங்களில் ஊடுருவல் மூலம் பூமிக்கு கீழேயும் செல்லும். அவ்வாறு அதிக அளவு தண்ணீர் சென்றதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் பில்லர் அமைத்துக் கட்டிய வீடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் பில்லர் அமைக்காமல் கட்டப்பட்ட பழங்காலத்து வீடுகளில் மட்டும் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமம் இருக்கும் பகுதியில் தண்ணீர் சரியாக செல்லக்கூடிய வகையில் பாதாள சாக்கடை அமைத்துவிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும், என்றனர்.
இருசக்கர வானங்கள் எரிந்து நாசம்
கோவை, நவ.22- கோவை அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமியது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள விளாங்குறிச்சியில் ஷீலா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இக்குடி யிருப்பில் வசிப்பவர்களின் வாகனங்களை தரை தளத்தில் நிறுத்துவது வழக்கம். அதிகாலையில், இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து குடியிருப்புவாசிகள், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடி யாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இதையடுத்து தீயை போராடி அணைத்தனர். அதற்குள் 6 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து, கோவில்பாளையம் போலீசார் சம்பவ யிடத்துக்கு வந்து இருசக்கர வானகங்களை யாராவது தீ வைத்து எரித்தார்களா? அல்லதுபெட்ரோல், மின் கசிவு காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானத்தில் தங்கம் கடத்தி வந்த நபர் கைது
கோவை, நவ.22- சார்ஜாவிலிருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அம்மா பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிக் (39). இவர் சார்ஜாவிலிருந்து கோவைக்கு விமானத்தில் செவ்வா யன்று அதிகாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது, 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அவர் அதி காரிகளிடம் வாக்குவாதம் செய்து தனது பாஸ்போர்ட், விசாவை கிழித்து வீசி னார். இதை சற்றும் எதிர்பாராத அதி காரிகள் அவரை கைது செய்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத் தனர். இதையடுத்து நடைபெற்ற விசார ணையில், முகமது சாலிக் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவதும், அங்கிருந்து தங்கத்தை கடத்தி வரு வதும் விசாரணையில் கண்டுபிடிக் கப்பட்டது. இதன் காரணமாகவே தனது பாஸ்போர்ட்டை கிழித்ததாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார் என்ற தகவல்கள் அந்த பாஸ் போர்ட்டில் பதிந்து இருப்பதனை அதி காரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கிழித்ததாக ஒப்புக் கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
இன்று மின் தடை
திருப்பூர், நவ.22- பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத் தினகுமார் தெரிவித்துள்ளார். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கொடு வாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பா ளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவி நாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் (ஒரு பகுதி), அலகுமலை (ஒரு பகுதி), காட்டூர் (ஒரு பகுதி), உகாய னூா்.
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் அரசுப் பேருந்துகள்
திருப்பூர், நவ.22- திருப்பூா் பெருமாநல்லூரை அடுத்துள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் தொடர்ந்து அரசு பேருந் துகள் நிறுத்தாமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை, ஈரோடு, கோபி, திருப்பூர் ஆகிய நான்கு முனை சந்திப்பை கொண்டது பெருமாநல்லூர். அதிகமான தொழில் நிறுவனங்களும், பள்ளிகளும் அமைந்துள்ள முக்கியமான சாலை திருப்பூர் பிஎன் சாலை. காலை நேரங்களில் பெருமா நல்லூரில் உள்ள சிஎஸ்ஐ காலனி, கொண்டதம்மன் நகர், ஈஸ் வரன் கோயில் வீதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவி களும், தினசரி வேலைக்கு சென்று வரும் பெண்கள் மேல்நி லைப்பள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு வருகிறார்கள். ஒரு சில அரசுப் பேருந்துகள் பெண்கள் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதால் குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்லமு டியாமல் பாதிக்கப்படுகிறார்காள். எனவே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித் துள்ளனர்.
ஆதார் எண் இணைப்பதால் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா?
ஈரோடு, நவ.22- ஆதார் எண் இணைப்பதால் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து என விசைத்தறியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பீதியை தமிழக அரசு போக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், தமிழக முதல் வர் மற்றும் மின்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, மின்வாரியத்திலிருந்து ஒவ்வொரு பய னாளிக்கும் மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்கு மாறு குறுந்தகவல் வந்து கொண்டுள்ளது. இது ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் உள்ளவர்களுக்கு இலவச மின்சா ரம் கிடைக்காது என்ற பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணை இணைத்த பின்புதான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று இணையதளத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கட்டணம் உயர்வு ஏற்படும் போதும் இலவச விவசாய மின் இணைப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளிக்கப்படுகிறது. விவசாயத்தைப் போல விசைத்தறிகளிலும் விசைத்தறி கூடங்கள், கட்டிடங் கள், மின் இணைப்புகள் மற்றும் தறிகளை குத்தகைக்கு (வாட கைக்கு) எடுத்து நடத்தும் நிலை உள்ளது. ஒருவர் பெயரில் பல இணைப்புகள் இருந்தாலும், அதனை பலர் வாடகைக்கு எடுத்து நடத்தும் நிலை உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் மேற்கண்டவாறு வாடகைக்கு எடுத்து இல வச மின்சாரம் மூலம் விசைத்தறி நடத்துபவர்களாகவே உள்ள னர். பள்ளிகளில் சத்துணவு, இலவச சீருடை, காலணி மற்றும் புத்தகங்கள் வழங்குவதையும், இலவச வேட்டி சேலை வழங்குவதையும், டாஸ்மாக் கடைகளையும் தடுக்க முடி யாதோ அதேபோல் விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதையும் நிறுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இந்நிலையில், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப் பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அது போல மின் இணைப்புடன் இணைப்பதையும் சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டுகிறோம். மேலும், அவ்வாறு இணைப்பதால் இலவச மின்சாரத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பாடு என்ற உத்தரவாதத்தை அளித்து பின்னர் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மானிய விலையில் டீசல் வழங்கிடுக வாடகை வாகன ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்
கோவை, நவ.22- மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என வலியு றுத்தி கோவையில் வாடகை வாகன ஓட்டுநர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன பர்மிட்டை பதிவிறக்கம் செய்வதை அரசு எளிமைப் படுத்த வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களையும், 177 சதவிகிதம் உயர்த்துவதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெட் ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து, அதனை ஜிஎஸ்டிக் குள் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசை தமிழக அரசு வலியு றுத்த வேண்டும். மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழி வகை செய்து தர வேண்டும். வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் வசூலிப் பதை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து சங்கங்களின் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்தா காலனி அருகே உள்ள டாடாபாத் பகுதியில், செவ்வாயன்று நடைபெற்ற வாடகை வாகன ஓட்டுநர்களின் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வைரஸ் காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பலி
உதகை, நவ.22- வைரஸ் காய்ச்சலுக்கு உதகை கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புளியம் பட்டி கிராமத்தை சேர்ந்த பூசை - தனலட்சுமி தம்பதியின் மகள் புவனேஸ்வரி (18). இவர் நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல் லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இவர் உதகையில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக புவனேஸ்வரி காய்ச்சல் மற்றும் வாந்தி பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். காய்ச் சல் பாதிப்பு அதிகமானதால் சிகிச்சைக்காக குன்னூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற் றம் ஏற்படாமல் இருந்தது. இதற்கிடையே செவ்வாயன்று காலை உடல் நிலையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி செவ்வா யன்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மனோகரி கூறுகையில், அந்த மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட உடனே மருத்துவ மனைக்கு வரவில்லை. கொஞ்சம் தாமதமாக தான் மருத்துவமனை வந்தனர். பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். அவருக்கு டெங்கு பாதிப்பு கிடையாது, என் றார். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை யில் இருந்து அவரது பெற்றோர் வந்து மாண வியின் உடலை வாங்கிச் சென்றனர். இதுகு றித்து உதகை மத்திய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கம்
கோவை, நவ.22- கிணத்துக்கடவு காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து காவலர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவி கள் கிணத்துக்கடவு காவல் நிலைய பணிகளை பார்வையிட வந்தனர். அங்கு வந்த மாணவ, மாணவிகளை காவல் ஆய்வா ளர் செந்தில்குமார் இனிப்புகள், வழங்கி வரவேற்றார். அப் போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், படிப்பி லும், விளையாட்டிலும் கவனம் செலுத்தி உடலை வலிமை யாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவிகளுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூற வேண்டும், என்றார். இதன்பின், காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்ட பின்னர் கணினியில் பதிவு செய்யும் முறையை பார்வை யிட்டு, காவலர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்தனர். அதன் பின் கைதிகள் அறை, ஆயுதக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் செயல்படும் விதம் குறித்தும் போலீசார் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.