திருப்பூர், ஜூன் 16- திருப்பூர் மாநகர முக்கிய சாலைகள் மற்றும் பள்ளிக ளுக்கு அருகில் அதிகப்படி யான போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த திருப்பூர் வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் வெள்ளி யன்று ஆய்வு மேற்கொண் டார். திருப்பூர் வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா குமரன் சாலை, அவிநாசி சாலை, பிஷப் பள்ளி, இன்பெண்ட் ஜீசஸ் பள்ளி, நஞ்சப்பா மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், பார்கிங் வசதிகள் முறையாக உள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், கொங்குநகர் காவல் உதவி ஆணையர் அணில்குமார், வடக்கு போக்குவரத்து ஆய்வாளர் பாண்டியரா ஜன், மாநகர வடக்கு காவல் ஆய்வாளர் உதய குமார், 15 வேலம்பாளையம் காவல் ஆய்வா ளர் தாமோதரன், அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் பிரேமா ஆகியோர் உடனிருந் தனர்.