நாமக்கல், ஜுலை 1- இராசிபுரம், குருசாமி பாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமுன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யின் கீழ் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோன்று, முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் ரூ.23.20 லட்சம் மதிப் பீட்டில் முத்துக்காளிப்பட்டி சாலை முதல் கோரக்காடு வரை புதிதாக அமைக்கப்பட் டுள்ள சாலை, ஆகியவற்றை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இராசிபுரம் வட்டம் வடுக முனியப்பம்பாளையம் கிராமம், சீராப்பள்ளி கிராமம், சின்ன காக்காவேரி ஆகிய இடங் களில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப் பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிடும் ஏதுவாக வரன் முறை படுத்தும் பணிகள் நடைபெற்று வரு வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, இராசிபுரம் வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர் மேகலா, உதவி பொறியாளர் சிவக் குமார், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் அ.சுப்பிரமணியம், செயல் அலுவலர் மகேஸ் வரி, பொறியாளர் பழனி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.