districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

அர்ஜூன் சம்பத் மீது வழக்கு கோவை, பிப்.20- வெறுப்புணர்வை தூண்டி மோதல் ஏற்படும் விதமாக  பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது மூன்று பிரிவுகளில், கோவை செல்வபுரம் போலீசார் வழக் குப்பதிவு செய்தனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், கடந்த சில  தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் மதரீதியாக இரு  சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக கருத்தை பதிவு செய்திருந்தார். இதனை கண்ட, செல்வ புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் பாபு, அர் ஜூன் சம்பத் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுதல், மதம், இனம், சாதி ரீதியில் பிரிவுகளுக்கிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த முயலுதல், தவறான தகவல்கள், வதந்திகளை பரப்புதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சட்டக்கல்லூரியில் பரிசளிப்பு விழா

சட்டக்கல்லூரியில் பரிசளிப்பு விழா சேலம், பிப்.20- சேலம் சட்டக்கல்லூரியில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி விளையாட்டு போட் டிகளுக்கான பரிசளிப்பு விழா, கல்லூரியின் விழா அரங்கத் தில் புதனன்று நடைபெற்றது. கல்லூரியின் உதவிப்பேரா சிரியை அன்சிர்பா வரவேற்றார். கல்லூரியின் தலைவர் த.சர வணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சேலம்  மாநகர காவல்துறை துணை ஆணையர் பி.கீதா கலந்து  கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். முன்னதாக, கல்லூரியின் இந்த கல்வி ஆண்டிற் கான விளையாட்டு ஆண்டு அறிக்கையை கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குநர் வெங்கடேஷ் வாசித்தார்.

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் திருப்பூர், பிப்.20- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் மாவட்ட கல்வி, போதைப்பொருள் தடுப்பு மற்றும் குழந்தை  திருமணம் தடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. மாவட்ட கல்வி ஆய்வு கூட்டத்தில் மாணவர்கள் வருகைப்  பதிவு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத் திய விவரம், பள்ளி செல்லாக் குழத்தைகளின் எண்ணிக்கை,  அதிகம் உள்ள மாணவர்கள் பள்ளிகள் விவரம், நேரடியாக  மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் எண் ணிக்கை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குழந் தைத் திருமணம் தடுப்புச் சட்டம் குறித்தும், தகவல் தெரி குக்கும் முறை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட் டது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில்,  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு  செயலாளர் சபீனா, மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்தி ரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஸ்  அசோக், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் மீ.உதயகு மார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி மற்றும்  துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கட்டிடத் தொழிலாளி பலி

திருப்பூர், பிப்.20- திருப்பத்தூரைச் சேர்ந்  கோவிந்தன் (48), கட்டு மானத் தொழிலாளி. இவர்  அவிநாசி அருகே பழங்கரை  நல்லிக்கவுண்டம் பாளையத் தில் தங்கி அங்குள்ள ஒரு கட் டிடத்தில் பணியாற்றி வந் தார். இந்நிலையில், அக்கட் டிடத்தின் மேல் நின்று புதன் கிழமை பணியாற்றியுள் ளார். அப்போது கோவிந்தன் எதிர்பாராதவிதமாக தவறி  கீழே விழுந்ததில் பலத்த  காயமடைந்தார். இதைய டுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அவிநாசி அரசு  மருத்துவமனைக்கு அழைத் துச் சென்றனர். அங்கு அவ ரைப் பரிசோதித்த மருத்து வர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து அவி நாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை  கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை  கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை  திருப்பூர், பிப்.20 - திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் தனியாக  வசித்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய  முயன்று அந்தப் பெண் மறுத்ததால், அடித்துக் கொலை செய் தவருக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள்  தண்டனை விதித்துள்ளது. கடந்த 2020-ம் வருடம் திருமுருகன்பூண்டி காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட சாரதா நகர் பகுதியில் கணவரை பிரிந்து  ஒரு பெண் தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற  போது, அவர் மறுக்கவே அவரை எதிரி பூபதி என்ற வீரா என்ற  மேர்லி என்பவர் அடித்து கொலை செய்து விட்டார்.  இது தொடர்பாக இறந்தவரின் மகள் அளித்த புகாரின் பேரில் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பூபதியை  (வயது-22)  காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில்  இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. திருப்பூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் வழக்கு விசா ரணையை முடித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். இதில் பூபதி  மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் சிறை தண் டனை மற்றும் அபராதம் ரூபாய்.15,000/- விதித்து தீர்ப்பு வழங் கினார். இவ்வழக்கினை அரசு வழக்குரைஞர் ஜமிலா பானு  நடத்தினார்.

நீதிமன்றத்தை மதிக்காத சர்க்கரை ஆலை: விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

நீதிமன்றத்தை மதிக்காத சர்க்கரை ஆலை: விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு ஈரோடு, பிப். 20- நீதிமன்ற உத்தரவை மதிக்காத பண்ணாரி அம்மன் சர்க் கலை ஆலை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் ஈரோடு மாவட்டத் தலைவர் கே.எம்.சதீஷ்குமார், செயலா ளர் எஸ்.முத்துசாமி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966 இன் படி  2004-05, 2008-09 ஆண்டுகளில் பண்ணாரி அம்மன் சர்க்கரை  ஆலை நிர்வாகம்  லாப பங்குத் தொகையை விவசாயிகளுக்கு  ரூ.14 கோடி வழங்க வேண்டும். ஆனால் நிர்வாகம் மறுத்து  வந்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிலுவை யில் உள்ள ரூ.14 கோடி லாபப் பங்குத்தொகையை விவசாயி களுக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், சட்டத்தை மதிக்காத ஆலை நிர்வாகம் நீதி மன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் மூன்று மாதங்களுக்கு மேலாக விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 7 ஆம் தேதியன்று சத்தியமங்கலம் வட் டாட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் டி.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.எம்.முனுசாமி மற்றும் கரும்பு விவசாயிகள் நீதி மன்றத் தீர்ப்பின்படி விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்கும் படி சுமார் 5 மணி நேரம் காத்திருந்தனர். அதன்பிறகு வந்த வட்டாட்சியர் பண்ணாரி ஆலை நிர் வாக அதிகாரிகளை வரவழைத்து முத்தரப்புக்கூட்டம் நடத்தி னார். அதில் நீதிமன்ற உத்தரவுபடி லாபப்பங்கு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி விடுகிறோம் என ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.  ஆனால், சட்டப்படி நடக்காத, நீதிமன்றத் தீர்ப்பை மதிக் காத, வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் ஒப்புக் கொண்டதையும் அமுல்படுத்தாமல் பண் ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் ஏமாற்றி வரு கிறது. எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆலை  மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும்  என வேண்டுகோள் விடுத்துள்ளனர். தவறும்பட்சத்தில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும், இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு கோவை, பிப்.20- கோவை தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வர்கள் மனோஜ் குமார் - புவனேஸ்வரி தம்பதியினர். இவர்க ளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் சக்தி சாலையில் உள்ள  தனியார் மருத்துவமனையில்  ஆண் குழந்தை பிறந்துள் ளது. மேலும், குழந்தை பிறந்த போதே குழந்தைக்கு ஆசன வாய் முழுமை அடையாமல் பிறந்துள்ளது. எனவே அந்த  மருத்துவமனையில் மலக்குடலை மட்டும் வெளியே எடுத்து  தற்காலிகமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 5 மாதங் கள் கழித்து மலக்குடல் ஆசன வாய் அறுவை சிகிச்சை செய்து  கொள்ளலாம் என்று தெரிவித்திருந்துள்ளனர்.  இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் பந்தய சாலை  பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை யில் (மாசானிக் கிளீனிக்) செவ்வாயன்று அறுவை சிகிச்சைக் காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் வியாழனன்று அறுவை சிகிச்சைக்கு முன்பு கொடுக்கப்படும் குடல் சுத்தம் செய்யும் மருந்து கொடுத்த போது  குழந்தை உயிரி ழந்துள்ளது.  இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு முன் குடல் சுத்தம்  செய்யும் மருந்தின் அளவு அதிகரிப்பால் குழந்தை இறந்த தாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி மருத்துவமனையின் முன்பு  கூடினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் னரே, உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவ ரும் என தெரிவித்தனர்.