கோவை, ஜூன் 12– வனப்பரப்பை அதிகப்படுத்த, நாற்று களை உற்பத்தி செய்ய, நாற்றங்கால் அமைக்கும் பணியினை தமிழக வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன் கோவை யில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் தொலைநோக்குத் திட்டத்தின் ஒருபகுதியாக, தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்த உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். நடப்பாண்டில் நிர் ணயிக்கப்பட்ட இலக்கான 2.5 கோடி நாற்று களை உற்பத்தி செய்வதற்கான நாற்றங் கால் அமைக்கும் பணி தமிழகம் முழுவ தும் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட் டத்தில் கோவை மற்றும் மதுக்கரை ஆகிய இடங்களில் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான நாற்றங்காலில் உள்ள நாற்று களை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கோவை மண்டல வனப்பாதுகாவலர் இராம சுப்பிரமணியம் , மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனி ருந்தனர்.