districts

img

உண்டியல் சேமிப்பில் புத்தகம் வாங்கிய மாணவர்கள்

தருமபுரி, செப்.14- தருமபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் உண்டியல் மூலம் சேமித்த பணத்தை வைத்து புத்தகம் வாங்கி சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி வள்ளலார் திடலில் நடை பெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர் கள் பெரும் திரளாக கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்லும் காட்சி அனைவரையும் மகிழ்ச்சிய டையச் செய்கிறது. கடந்தாண்டு நடை பெற்ற புத்தகத் திருவிழாவில் சிறு சேமிப்பு உண்டியல் பெற்ற மாணவர் கள், அதில் சேமித்து வைத்து வந்த னர். இந்நிலையில், சின்னப்பள்ளத் தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட் டவர்கள் புத்தகத் திருவிழாவிற்கு சிறு சேமிப்பு உண்டியலுடன் வந்திருந்த னர். அதில் உள்ள சேமிப்பு தொகை யில் மாணவர்கள் புத்தகங்களை ஆர் வத்துடன் வாங்கி சென்றனர்.